Skip to main content

Flipkart's Big Billion Day விற்பனை. எதிர்பார்ப்புகள் என்ன?

அனைவரும் ஆவலுடன் எதிர் நோக்கும் Flipkart மின் வணிக தளத்தின் Big Billion Day விற்பனை தொடங்க இன்னும் இரண்டு தினங்களே உள்ளது. எதிர் வரும் செவ்வாய் கிழமை 13-10-2015 முதல் 17-10-2015 ஐந்து தினங்கள் நடக்க இருக்கிறது.
சென்ற ஆண்டில் பல குளறுபடிகள் நடந்ததால் இந்த முறை
ரொம்பவே எச்சரிக்கையாக இருக்கிறார்கள் பிலிப்கார்ட் நிறுவாகத்தினர். சென்ற முறை பிலிப்கார்ட் சர்வர் டவுன் ஆனது. பலருக்கு பொருள்கள் கிடைக்கவில்லை. ஆர்டர் செய்தவர்களுக்கே பணத்தை திருப்பி தர வேண்டிய நிலைமை ஆனது. முடிவில் பிலிப்கார்டை கட்டாய மன்னிப்பு கோர சொன்னதின் பெயரில் பிலிப்கார்ட் நிறுவனமும் அனைவருக்கும் மின்னஞ்சல் மூலம் மன்னிப்பு கோரியது அனைவருக்கும் நினைவு இருக்கலாம். அப்படியும் சென்ற முறை600 கோடிக்கு விற்பனை நடந்தது.

இந்த முறை Flipkart App மூலம் விற்பனை பரிவர்த்தனை நடப்பதால் விற்பனை இரட்டிப்பாகும் என தெரிகிறது. இது பற்றி கருத்து தெரிவித்த பிலிப்கார்ட் இணை நிறுவனரும், முதன்மை அலுவலரும் ஆன சச்சின் பன்சால் (Sachin Bansal) 1.5 மில்லியன் பேர் பயனடைய முடியும். மேலும் விரைவில் அனைவருக்கு பொருளை அனுப்ப 19000 கூரியர் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். இந்தியா முழுவதுமாக 20000 பின் கோட் இணைக்கப்பட்டு இருக்கிறது. மூன்று முக்கிய நகரங்களில் இருந்து கூரியர் மூலம் பொருள்கள் அனுப்பி வைக்கப்படும். எனவே சென்ற முறை போன்று இந்த வருடம் பெரிய அளவில் குளறுபடி நடக்காது என நம்புவோம்.

மேலே படத்தில் தேதிகள் வாரியாக விற்பனை செய்யப்படும் பொருள்களின் விவரங்களையும் கொடுத்து இருக்கிறார்கள். இருப்பினும் தினமும் கவனித்து வாருங்கள்.சென்ற முறை போன்று இந்த முறையும் ஒரு ரூபாய் முதல் பென்டிரைவ், மெமரி கார்ட் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருள்கள் கிடைக்க இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஒருசில எலக்ட்ரானிக் சாதனங்கள் 90 சதவீதம் வரையும் பல எலக்ட்ரானிக் சாதனங்கள் 80 சதவீதம் வரை சலுகை விலையில் கிடைக்கும் என்று பிலிப்கார்ட் முதன்மை பிரதிநிதி Ankit Nagori டைம்ஸ் ஆஃப் இந்தியா பேட்டியில் சொல்லி இருக்கார்.

Flipkart தற்போது மேம்படுத்திய அப்ளிகேசனை வெளியீட்டு இருக்கிறது.இங்கே கிளிக்செய்து டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். பெரும்பாலான டீல்ஸ் காலை 8 மணிக்கே கிடைக்க தொடங்கும். எனவே அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்து கார்ட் விவரங்களை உள்ளீடு செய்து தயாராக வைத்து இருங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்