Skip to main content

மாநிலப் பாடத் திட்டத்தை தரம் உயர்த்த ஆய்வு நடத்த முடிவு:

மாநிலப் பாடத் திட்டத்தை தரம் உயர்த்த ஆய்வு நடத்த முடிவு: ஓய்வு பெற்ற கல்வி அலுவலர்கள் அமைப்பு அறிவிப்பு
மாநிலப் பாடத்திட்டத்தைத் தரம் உயர்த்துவதற்காக, அந்தப் பாடத் திட்டத்தை சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பிற பாடத் திட்டங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு நடத்த தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஓய்வு பெற்ற அலுவலர்கள் அமைப்பு முடிவு எடுத்துள்ளது.



 இந்த அமைப்பின் உயர் மட்டக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக அதன் பொதுச்செயலாளரும், பள்ளிக் கல்வி முன்னாள் இயக்குநருமான கே.மாரியப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:- 
 தமிழகத்தில் இப்போது நடைமுறையில் உள்ள மாநிலப் பாடத்திட்டத்தினை பிற கல்வி வாரிய பாடத்திட்டங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு நடத்தப்படும். இதற்காக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், கல்வி அதிகாரியுமான ஆர்.பழனியாண்டி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு இந்த ஆய்வுக்கான முன்னேற்பாடுகளைச் செய்யும்.
 அதேபோல், பிளஸ் 2 மாணவர்கள் அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் அதிக அளவில் வெற்றி பெற முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்தும் ஆய்வு செய்து கருத்துகள் சமர்ப்பிக்கவும் இந்தக் குழு முடிவு எடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
 இந்த அமைப்பின் நிர்வாகிகளும் முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநர்களுமான சி.பழனிவேலு, பி.மணி, எஸ்.பரமசிவம், ஆர்.நாராயணசாமி, கே.தேவராஜன் உள்ளிட்டோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு