Skip to main content

புது வாக்காளர் அட்டை தேர்தல் அதிகாரி தகவல்

''ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தவர்கள், புதிய அட்டை பெற விரும்பினால், அதற்கு, 001 என்ற தனி படிவம் அளிக்க வேண்டும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப்
சக்சேனா கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று அளித் பேட்டியில்:வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், , 20 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. பெயர் சேர்க்க கோரியவர்களுக்கு, முதல் முறையாக, வண்ண அடையாள அட்டை இலவ சமாக வழங்கப்படும்.ஆனால், ஏற்கனவே அடையாள அட்டை வைத்திருந்து, முகவரி மாற்றத்துக்காக விண்ணப்பித்தவர்கள், புதிய அட்டை பெற, 001 படிவம் அளிக்க வேண்டும்; அத்துடன், 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

அதை, 'ஆன்லைன்' மூலமாகவும் வழங்கலாம். இப்போது, பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்யக் கோரி வந்த விண்ணப்பங்களை, கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடக்கிறது. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரம், உடனுக்குடன் சம்பந்தப்பட்டவருக்கு, எஸ்.எம்.எஸ்., அல்லது இ-மெயில் மூலம் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு சந்தீப் சக்சேனா கூறினார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா