Skip to main content

பேராசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங்

தமிழக அரசு கலை கல்லுாரிகளின் பேராசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு, வரும், 26, 27, 28ம் தேதிகளில் நடக்க உள்ளது.

தமிழகத்தில், 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன; 9,000 பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் துறைத்தலைவர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், ஜூலை
முதல் ஆகஸ்டுக்குள், விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், மறைமுகமாக பல பேராசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது.இதையடுத்து, இடமாறுதல் கலந்தாய்வை தாமதமின்றி நடத்த, உயர்கல்வித் துறைக்கும், கல்லுாரி கல்வி இயக்ககத்துக்கும், அரசு கல்லுாரி ஆசிரியர் மன்றம் மனு அளித்தது.

அரசு கல்லுாரி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலர் சிவராமன் தலைமையிலான நிர்வாகிகளை, கல்லுாரி கல்வி இயக்குனர் சேகர் நேற்று அழைத்து பேசினார். 'வரும், 26ம் தேதி முதல் 28 வரை இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். 31 அரசு கலைக்கல்லுாரிகளின் முதல்வர் பணியிடங்கள், இரண்டு வாரத்தில் நிரப்பப்படும்; 2007க்கு பின் பணியில் சேர்ந்த பேராசிரியர்களுக்கு, 7,000 ரூபாய் தர ஊதியம் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது' என, கல்லுாரி கல்வி இயக்குனர் அறிவித்தார் என, கல்லுாரி ஆசிரியர் மன்றம் தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு