Skip to main content

குழந்தைகள் விரும்பும் பள்ளிகளாக இன்றைய பள்ளிகள் இருக்கின்றனவா?

யுனிசெப் நிறுவனம் சென்னையில் செயல்பட்டுவரும் சமூகக் கல்வி நிறுவனம் என்ற அமைப்புடன் சேர்ந்து தமிழகம் முழுவதும் குழந்தை நேயப் பள்ளிகளை உருவாக்கும் முனைப்புடன் சில செயல்
திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

       இதன் ஒரு நிகழ்வாக யுனிசெப் நிறுவனம் வெளியிட்டிருந்த ”Child friendly schools” என்ற ஆங்கில நூல் ”குழந்தை நேயப் பள்ளிகள் – கொள்கைகள் மற்றும் அமைப்பு முறைகள்” என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அதன் புத்தக மதிப்புரை சென்னை சாந்தோம் மலையில் வைத்து அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குழந்தை நேயப் பள்ளி எப்படி இருக்க வேண்டும் என்று பல்வேறு பரிமாணங்களில் விவாதிக்கப்பட்டது.

குழந்தைகள் விரும்பும் பள்ளிகளாக இன்றைய பள்ளிகள் இருக்கின்றனவா?. அத்தகைய பள்ளிகளை உருவாக்க தலைமை ஆசிரியர், ஆசிரியர், பெற்றோர், சமூகம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடையாக குழந்தை நேய பள்ளிகளுக்கு மாதிரியாக விளங்கும் நெடுவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கருப்பையன் அவர்கள் குழந்தைகள் நேயப் பள்ளியை உருவாக்க தான் பயணித்து வந்த பாதையை அனைவரோடும் பகிர்ந்து கொண்டார்.

நாம் அனைவரும் நம் பள்ளிகளை குழந்தை நேய பள்ளிகள் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு கூறாக எடுத்துப் பார்த்தால் நம் பள்ளி குழந்தைகள் விரும்பும் பள்ளியாக இருக்குமா என்பது சந்தேகம் தான். குழந்தைகள் விரும்பக்கூடிய சுற்றுச்சூழல், கற்றல் சூழல், படிக்கும் பாடம், கற்பிக்கும் முறைகள், கற்றதை சோதிக்கும் முறைகள் இவைகள் இருக்குமா என்றால் சந்தோகம் தான். வீட்டுக்குச் செல்லும் போது இருக்கும் மகிழ்ச்சி பள்ளிக்குள் வரும் போது காணாமல் போகிறது. குழந்தைகள் விரும்பும் சூழல் இருந்தால் தான் கற்றல் நிகழும்.

இத்தகைய பள்ளிகளை தமிழகம் முழுவதும் உருவாக்கும் நிகழ்வின் முதல் படியாக 150 பள்ளிகளை மாதிரி குழந்தை நேயப் பள்ளிகளாக உருவாக்கும் முயற்சியை யுனிசெப் நிறுவனத்தோடு இணைந்து மேற்கொண்டுள்ளோம். இதன் படி ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 பள்ளிகளை மாற்றுவதற்கு இலக்கு வைத்துள்ளோம். ஒரு check list தயார் செய்து அந்த check list ல் இருக்கும் செயல்பாடுகள் ஒரு பள்ளியில் இருந்தால் அது குழந்தை நேயப் பள்ளி என வரையறுக்கப்பட்டுள்ளது. 

நாங்களாக பள்ளிகளை தேர்ந்தெடுத்தால் அந்த பள்ளி check list ல் உள்ள அனைத்தும் தங்களிடம் இருப்பதாக கூறி தங்கள் பள்ளி குழந்தை நேயப் பள்ளி என்று அறிவித்து விடும். ஆனால் நிஜமாக அந்த பள்ளி குழந்தை நேயப் பள்ளியாக இருக்காது.

அதனால் தாங்களாகவே முன்வந்து தங்கள் பள்ளிகளை குழந்தை நேயப் பள்ளிகளாக மாற்றம் செய்ய விரும்பும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் check list ல் இல்லாத செயல்பாடுகளை தங்கள் பள்ளிகளில் கொண்டுவர முயற்சிப்பர். அப்படி முயற்சிக்க விரும்பும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் விருப்பத்தை இங்கே தெரிவியுங்கள். உங்களுக்கு யுனிசெப் நிறுவனத்தோடு இணைந்து குழந்தை நேய பள்ளிகளை உருவாக்கும் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

கட்டாயப்படுத்தி எதையும் சாதிக்க இயலாது. விருப்பமுள்ளோர் தொடர்பு கொள்ளுங்கள். சமத்துவக் கல்வி அமைப்பில் தொடர்புகொள்ள ஷியாம் சுந்தர் - 9750966400

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு