Skip to main content

மத்திய அரசின் 'விர்ச்சுவல் கிளாஸ்' திட்டத்துக்கு பள்ளிகள் தயார்!

மத்திய அரசின் 'விர்ச்சுவல் கிளாஸ்' திட்டத்துக்கு பள்ளிகள் தயார்! விரைவில் செயல்படுத்த மாணவர்கள் ஆவல்.

மத்திய அரசின் 'விர்ச்சுவல் கிளாஸ்' திட்டத்துக்கு பள்ளிகள் தயார் நிலையில் இருப்பதால், விரைவில் செயல்படுத்த மாணவர்களின்
எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


படிப்பதற்கும், 'மத்திய அரசின் சார்பில் 'விர்ச்சுவல் கிளாஸ்' திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், பாடங்களை, செயல்முறையாக கற்பிப்பது மற்றும் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிக்கூறும் வகையில், 'சிடி'க்களின் மூலம் பாடம் நடத்தும் நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.

இதனை செயல்படுத்த, மாவட்ட கல்வித்துறையின் வாயிலாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில், அரசுப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில், 25 பள்ளிகளில் திட்டத்துக்கு தேர்வாகியுள்ளன. உடுமலையில் ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிகள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளிலுள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர்களே, இத்திட்டத்தின் மூலம் பாடம் நடத்தவும், அப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் அமைத்து, இத்திட்டத்தை செயல்படுத்த கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 'ப்ரொஜெக்டர்' கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படி, கடந்த செப்.,மாதம் கல்வித்துறை அறிவுறுத்தியது. தற்போது, பள்ளிகளில், இதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, தொழில்நுட்ப வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. பள்ளிகள் தயார் நிலையில் இருப்பதால், திட்டத்தை விரைவில் செயல்படுத்த பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் மாணவர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அரசின் மூலம் அறிவிக்கப்படும்

மாவட்ட கல்வித்துறையினர் கூறுகையில், 'திட்டத்தை செயல்படுத்த தேவையான உபகரணங்களை வைப்பதற்கு அரசு அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அரசின் மூலமே அறிவிக்கப்படும்' என்றனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு