Skip to main content

கோ - ஆப்டெக்ஸில் ஜவுளி கடன் அதிகரிப்பு: அரசு துறைகளுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப அனுமதி

ஜவுளிக் கடனை திரும்ப செலுத்தாத, அரசுத்துறைகளுக்கு, நோட்டீஸ் அனுப்ப, மண்டல மேலாளர்களுக்கு, அனுமதி வழங்கி, கோ - ஆப்டெக்ஸ் நிர்வாகஇயக்குனர் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம், தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது, அரசுத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாத தவணை அடிப்படையிலும், துறைகளின் மொத்த கொள்முதலுக்கும், மூன்று மாத சம்பள அடிப்படையில், கடனுக்கு ஜவுளி வகைகள் வழங்கப்படுகின்றன.அந்த வகையில், கோ - ஆப்டெக்ஸில், ஜவுளியை கடனாக பெற்ற அரசுத்துறைகள், அதில் பணியாற்றும் ஊழியர்கள், வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால், நிலுவைக் கடன் தொகை அதிகரித்தது.கடந்த, 2010 வரை, தொடர்ந்து கடனை திரும்ப செலுத்தாத பட்சத்தில், நோட்டீஸ் வழங்கி, சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வந்தது.


கடந்த, 2010 செப்.,21ல், அப்போதைய கோ - ஆப்டெக்ஸின், கடன் விற்பனை பிரிவு மேலாளர் சரஸ்வதி, ஜவுளி ரகங்களின் விற்பனையை கருத்தில் கொண்டு, அரசுத்துறைகளுக்கோ, ஊழியர்களுக்கோ, நோட்டீஸ் அனுப்புதல் உள்ளிட்ட சட்டப்பூர்வநடவடிக்கை மேற்கொள்ள தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.கடந்த, 2010 செப்., துவங்கி, 2015 செப்., 7ம் தேதி வரை, இதே நடைமுறை பின்பற்றப்பட்டதால், அரசுத்துறை ஊழியர்கள், கோ - ஆப்டெக்ஸில் பெற்ற கடன் தொகையை செலுத்தாமல் நிலுவையில் வைத்தனர். இதனால், அந்த தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது.செப்.,9ல், கோ - ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ், கடன் பெற்று திரும்பசெலுத்தாத அரசுத்துறைகள், ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தார்.


நோட்டீஸ் அனுப்புவது குறித்து, மண்டல மேலாளர், மண்டல கமிட்டிக்கு விற்பனை நிலையத்தின் மேலாளர் பரிந்துரை செய்ய வேண்டும். அந்த பரிந்துரையின் அடிப்படையில், மண்டல மேலாளர்கள், மண்டல கமிட்டி, கடன் பெற்றவர்களின் விபரத்தை பெற்று, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளலாம். மேற்கொள்ளப்படும் நடவடிக்கை, மாற்றம் குறித்து, தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு