Skip to main content

அப்துல்கலாமின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட சுற்றறிக்கை

அப்துல்கலாமின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக பள்ளிக்கூடங்களில் கொண்டாடுங்கள்: பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து பள்ளிகளுக்கும்
முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாகசுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:-


“இந்தியாவின் ஏவுகணை நாயகன்” என்றும் “இளைஞர்களின் எழுச்சி நாயகன்” என்றும் போற்றப்படும் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பிறந்த தினமான அக்டோபர் 15-ந்தேதி “இளைஞர் எழுச்சி நாள்” ஆக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளார்.அதன்படி அப்துல்கலாமின் பிறந்த தினத்தினை அனைத்து பள்ளிகளிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என அறிவித்துள்ளார். எனவே , அக்டோபர் 15-ந்தேதி அனைத்து பள்ளிகளிலும் கீழ்க்கண்ட அறிவுரைகளின்படி, போட்டிகள் நடத்தப்பட்டு, “இளைஞர் எழுச்சி நாள்” ஆக கொண்டாட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.1 மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களைக் கொண்டு, அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இளைஞர் பேரணி அக்டோபர் 15-ந்தேதி காலை 9 மணியளவில் நடத்த வேண்டும்.2. கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப்போட்டிகளை மாவட்ட அளவில், அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளி, தனியார் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் (6 முதல் 12 வரை) படிக்கும் மாணவர்களைக் கொண்டு அக்டோபர் 13-ந்தேதி நடத்தப்பட வேண்டும்.இப்போட்டிகளிலிருந்து 6 முதல் 8 வரை உள்ள மாணவர்களில் முதலிடம் பெறும் ஒரு மாணவரும், 9 முதல் 12 வரை உள்ள மாணவர்களில் முதலிடம் பெறும் ஒரு மாணவரும், மாநில அளவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில், பரிசு பெற அனுப்பப்பட வேண்டும். மாநில அளவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள் பங்கேற்க வேண்டும்.3. மாவட்ட அளவில், நடுநிலை (6 முதல் 8) , உயர்நிலை (9 மற்றும்10) மற்றும் மேல்நிலைப்பள்ளி ( பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2) மாணவர்களைக் கொண்டு அக்டோபர் 13-ந்தேதி அறிவியல் கண்காட்சி நடத்தப்பட வேண்டும். அதில் தேர்ந்தெடுக்கப்படும் முதலிடம் பெறும் மாணவர் தங்களது படைப்புகளோடு 14-ந்தேதி காலை சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க செய்ய வேண்டும்.4. பள்ளி மாணவர்கள் பயனடையும் விதமாக, விண்வெளி கல்வி சார்பான புகைப்படக் காட்சி, அக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் நடைபெறுகிறது. விருப்பமுள்ள பள்ளிகள் மாணவர்களை பிர்லா கோளரங்கத்திற்கு அழைத்துச் சென்று புகைப்படக் காட்சியினைக் காணச் செய்யலாம்.5. தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், உள்ளுர் பிரமுகர்களைக் கொண்டு, அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளிலும், அக்டோபர் 15-ம் நாளன்று பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை ஒரு மணி நேரம் அப்துல்கலாமின் முன்னேற்ற சிந்தனை சார்பான கருத்துக்களை எடுத்துரைக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு