Skip to main content

அரசுக்கு எதிராக நிலுவையில் உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் எத்தனை?

அரசுக்கு எதிராக நிலுவையில் உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் எத்தனை? தகவல்களை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு.
அரசுக்கு எதிராக நிலுவையில் உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் விவரங்களை அட்டவணை வடிவில் தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

 இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனு விவரம்:


 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், சென்னை உயர்நீதிமன்றத்தின் துணைப் பதிவாளரிடமிருந்து (நிர்வாகம்) அரசு அதிகாரிகளுக்கு எதிராக நிலுவையில் உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் குறித்த தகவல்களை கேட்டுப் பெற்றேன். 
 அதில், 2010 முதல் 2014 பிப்ரவரி வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் 12,527 வழக்குகளும், 2014 அக்டோபர் வரை மதுரை கிளையில் 8,475 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. மேலும், அரசு அதிகாரிகளுக்கு எதிராக இரு நீதிமன்றங்களும் பிறப்பித்த உத்தரவுகளை அரசு நிறைவேற்றாமல் உள்ளது. மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால், உரிய அரசு அதிகாரிகள் ஆஜராவது இல்லை. எனவே, வழக்கில் அரசு அதிகாரிகளை நேரில் ஆஜராகுமாறும், அவர்களை சட்டப்படி தண்டிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
 இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு பிறப்பித்த உத்தரவு:
 மனுதாரர் ஏற்கெனவே தாக்கல் செய்த ஒரு மனுவில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலர் 
 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். இதில், "நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உத்தரவுகளை குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற வேண்டும். இதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் மேல்முறையீடு செய்யலாம். 
 இந்த உத்தரவைச் செயல்படுத்தத் தவறினால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறப்பட்டிருந்தது.
 இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஓராண்டாகியும், இந்த விஷயம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என அரசு தரப்பு வழக்குரைஞர் தெரிவித்துள்ளார். ஆனால், ஏராளமான அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
 இந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி, சுற்றறிக்கையின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை, நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை, முடித்து வைக்கப்பட்டுள்ள வழக்குகள், அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை என்பது உள்ளிட்ட விவரங்களை அட்டவணை வடிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். பின்னர், இந்த வழக்கு விசாரணை நவம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு