Skip to main content

லேப்- - டாப் பெற்ற மாணவர்களின் விவரங்களை கேட்ட கல்வித்துறை


        மூன்று ஆண்டுகளாக, லேப் - டாப் பெற்ற மாணவர்களின் ஜாதி, இருப்பிடவிவரங்களை, ஒரேநாளில் வழங்க அறிவுறுத்தியதால் மாவட்ட கல்வி அலுவலக ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.தமிழகத்தில் ஆண்டுதோறும்பள்ளிக் கல்வித்துறை பிளஸ் 2 மாணவ,
மாணவியருக்கு இலவச லேப் - டாப் வழங்குகிறது.

        மாநில பள்ளி கல்வித்துறை, அனைத்து முதன் மை கல்வி அலுவலகங்களுக்கும், லேப் - டாப் பெற்ற பிளஸ் 2 மாணவ -மாணவர்களின் ஜாதி, வயது, இருப்பிட விவரங்களை உடனடியாக வழங்கும்படி உத்தரவிட்டது. பள்ளி கல்வித்துறையின் இந்த திடீர் உத்தரவால் விவரங்களை சேகரிக்க முடியாமல் ஊழியர்கள் தவித்தனர்.

அதேபோல் 2011 முதல் 2014 வரையிலான விவரங்களை உடனடியாக வழங்கும்படி அறிவுறுத்தியதால், தினசரி பணிகளோடு இதை முடிக்க முடியாமலும் காலதாமதம் ஏற்பட்டது.இதை கண்டுகொள்ளாத மாநில கல்வித்துறை தொடர்ந்து 'போன், பேக்ஸ், இணையத்தளம் வாயிலாக உடனே விவரங்களை அனுப்ப கோரியதால் அந்தந்த முதன்மை கல்வி அலுவலக ஊழியர்கள், காலஅவகாசம் தராததால் அதிருப்தியடைந்தனர். மூத்த கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: காலாண்டு தேர்வு முடிந்து, விடைத்தாள்கள் சரிபார்ப்பு, மதிப்பீட்டுப் பணிகள் நடக்கின்றன.


இந்தப் பணிகளோடு மாணவர்களுக்கான போட்டிகள் நடக்கின்றன. வேலைப்பளு அதிகரிக்கும் சூழ்நிலையில் ஒரே நாளில் பள்ளி கல்வித்துறை, 4 கல்வி ஆண்டுகளுக்கான 'லேப் - டாப்' பெற்ற மாணவ, - மாணவியரின் விவரங்களை உடனுக்குடன் கேட்பது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. மாநில பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் கால அவகாசம் வழங்கி விவரங்களைபெற முன் வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். 

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்