பள்ளி, கல்லுாரிகளில் அரசு சார்பிலான சில உதவி தொகைகள், கல்விக் கடன் பெறவும் வருமானச் சான்றிதழ் அவசியம். அரசு வழங்கும் திருமண நிதியுதவி திட்டம், பெண் குழந்தைகள் நலத்திட்டம் போன்றவை
பெறவும் இச்சான்றிதழ் தேவை. இதற்கான விண்ணப்பங்கள் தாலுகா அலுவலகங்களில் கிடைக்கும்.
அதை பூர்த்தி செய்து, ரேஷன் கார்டு உட்பட தேவையான ஆவணங்களின் சான்று நகல்களை இணைத்து, வருமானத்திற்கான ஆதாரங்களை காட்டி, தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் பெறலாம். வருமானம் மாறக்கூடியது என்பதால், இதை நிலையான சான்றாக எடுத்து கொள்ள முடியாது.