Skip to main content

சாலை பாதுகாப்பு விதிமுறை உறுதிமொழி எடுக்க உத்தரவு

பள்ளியில் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டத்தில், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து, மாணவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.போக்குவரத்து விதிமுறை மீறல்,
வாகனங்கள் பழுது, அதிக மாணவர்களை ஏற்றிச் செல்லுதல், பராமரிப்பு குறைவு போன்ற காரணங்களால், பள்ளி வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றன. இந்நிலையில், மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை கற்றுத்தர, கல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.

அதன் விவரம்:தேசிய குற்றவியல் அறிக்கைப்படி, ஆண்டுதோறும், 1.4 லட்சம் பேர் சாலை விபத்தில் மரணமடைகின்றனர். இதற்கு முக்கியக் காரணம், சாலை விதிமுறைகளை மீறுவது தான். எனவே, பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து, மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும், சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பள்ளியில் நடக்கும் காலை நேர பிரார்த்தனைக் கூட்டத்தில், வாரத்தில் ஒரு நாளாவது, இந்த உறுதிமொழி எடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்