பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய வசதியை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி வாடிக்கையாளர் ஒருவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் டெலிபோன், செல்போன் இணைப்புகளை வைத்திருக்க வேண்டும். அவர்கள், இரவு நேரத்தில் வீடு அல்லது அலுவலகத்
துக்கு வரும் டெலிபோன் அழைப்புகளை செல்போனுக்கு வரும்படி மாற்றிக் கொள்ளலாம்.
பரிசோதனை முயற்சியாக இந்த வசதியை தீபாவளி முதல் அறிமுகம் செய்ய உள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த புதிய வசதியை பெற கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது’ என்றனர்.