Skip to main content

அறிவியில் வினாத்தாள் முறையில் மாற்றம்!

மாணவர்கள் சிந்தித்து, பதில் அளிக்கும் வகையில், அறிவியல் வினாத்தாள் முறையில் மாற்றம் கொண்டு வரப்படும், என,பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பேசினார். கரூர், புலியூர் செட்டிநாடு பொறியல் கல்லூரியில், தலைமையாசிரியர்,ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம் நடந்தது.பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பேசியதாவது
:

அரசுப் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில் மாணவர் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது. அறிவியல் பாடத்தில் சி.பி.எஸ்.இ., பாடத்தைப் போல மாணவர்கள் சிந்தித்து பதில் அளிக்கும் வகையில் வினாத்தாள் முறையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. சொல்யூசன் புத்தகம் தயாராகி வருகிறது. தலைமையாசிரியர்கள் இதுபற்றி அறிவியல் ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தி செயல்படுத்த வேண்டும். 

மதிப்பெண் மட்டுமே பிரதானம் அல்ல. மதிப்பெண் அதிகம் பெற வைப்பதோடு, சமுதாயத்தை சிறப்பாக உருவாக்கும் பணியிலும் ஈடுபட வேண்டும். அடுத்த தலைமுறையை உருவாக்கும் பணியின் பொறுப்பை உணர்ந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். விஷன் திட்டத்தில் தொழில்துறைக்கு அடுத்தபடியாக கல்வித்துறைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா