Skip to main content

கல்வி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம்:தலைமை ஆசிரியர்கள் புறக்கணிப்பு

செய்யாறில் நடைபெற்ற கல்வி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்த தலைமை ஆசிரியர்கள் அங்கிருந்து வெளிநடப்பு செய்து கோஷமிட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான கல்வி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் செய்யாறு இந்தோ அமெரிக்கன் மேல்நிலைப்
பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, திருவண்ணமாலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் வாரியாக தேர்ச்சி சதவிகிதம் குறித்த புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு வட்டாரமாக கேட்டு வந்துள்ளார். அப்போது தலைமையாசிரியர்களைத் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலைமை ஆசிரியர்கள், மாலையில் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்போது மாநில திட்ட இயக்குநரைக் கண்டித்து குரல் எழுப்பியபடியே வெளியேறினர்.
பின்னர் மாநில தலைமை ஆசிரியர்கள் சங்கத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் நடராஜன் ஆகியோர் தலைமையில் திரண்ட தலைமையாசிரியர்கள் மாநிலத் திட்ட இயக்குநரைக் கண்டித்து கோஷமிட்டனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்