Skip to main content

கல்வி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம்:தலைமை ஆசிரியர்கள் புறக்கணிப்பு

செய்யாறில் நடைபெற்ற கல்வி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்த தலைமை ஆசிரியர்கள் அங்கிருந்து வெளிநடப்பு செய்து கோஷமிட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான கல்வி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் செய்யாறு இந்தோ அமெரிக்கன் மேல்நிலைப்
பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, திருவண்ணமாலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் வாரியாக தேர்ச்சி சதவிகிதம் குறித்த புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு வட்டாரமாக கேட்டு வந்துள்ளார். அப்போது தலைமையாசிரியர்களைத் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலைமை ஆசிரியர்கள், மாலையில் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்போது மாநில திட்ட இயக்குநரைக் கண்டித்து குரல் எழுப்பியபடியே வெளியேறினர்.
பின்னர் மாநில தலைமை ஆசிரியர்கள் சங்கத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் நடராஜன் ஆகியோர் தலைமையில் திரண்ட தலைமையாசிரியர்கள் மாநிலத் திட்ட இயக்குநரைக் கண்டித்து கோஷமிட்டனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா