Skip to main content

வீட்டுக்கடன், வாகன கடனுக்கான வட்டி குறைப்பு: இந்தியன் வங்கி பொதுமேலாளர் அறிவிப்பு:

  நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி 0.5சதவீதம் குறைத்தது. இந்த ஆண்டு இதுவரை 1.25 சதவீதம் வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளது.


          ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை குறைத்ததை அடுத்து தனிநபர் கடன், வாகன கடன், வீட்டுக்கடன் உள்ளிட்டவற்றின் வட்டி விகிதங்களையும் குறைக்கவேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.இதையடுத்து வங்கிகள் வட்டி வீதங்களை குறைத்து வருகின்றன. இந்த நிலையில் திருவிழா காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வீட்டுக்கடன் மற்றும் வாகன கடன்களுக்கான வட்டியை குறைப்பதாகஇந்தியன் வங்கி அறிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வடக்கு மண்டல மேலாளர் மற்றும் பொதுமேலாளர் எம்.நாகராஜன் கூறியதாவது:-திருவிழா காலத்தை கொண்டாடும் வகையில் இந்தியன் வங்கி வீட்டுக்கடன் வட்டியை மிகவும் குறைவாக 9.65 சதவீதம் ஆகவும், வாகன கடன் வட்டியை 10 சதவீதம் ஆகவும் குறைத்துள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா