Skip to main content

கிஷோர் வைக்யானிக் பிரோட்சகன் யோஜனா

கிஷோர் வைக்யானிக் பிரோட்சகன் யோஜனா
 கல்வித்தகுதி அறிவியல்:
* பத்தாம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2வில் அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.
* பிளஸ் 2 அறிவியல் பாடங்களில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்பில் அறிவியல்
பாடத்தை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.


* சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட் போட்டியில் நடப்பு ஆண்டில் இந்தியா சார்பாக கலந்து கொண்டவர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுவர்.
பொறியியல்: * இரண்டாம் ஆண்டு பி.இ.,/பி.டெக்., படிப்பை முடித்தவர்; இரண்டு ஆண்டுகளிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; ஆராய்ச்சியில் ஈடுபாடு இருக்க வேண்டும். மருத்துவம்:
* இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்.,/பி.வி.எஸ்சி.,/பி.டி.எஸ்., படிப்பை முடித்தவர்; இரண்டு ஆண்டுகளிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆராய்ச்சியில் ஈடுபாடு இருக்க வேண்டும்.
எண்ணிக்கை: அறிவியல்: பத்தாம் வகுப்புதேர்ச்சி பெற்றவர்களுக்கு 60 வரை; பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு 60 வரை பொறியியல்: 25 வரை மருத்துவம்: 25 வரை காலம்: அறிவியல்: பிளஸ் 1 வகுப்பு/எம்.எஸ்சி., படிப்பு வரையிலானவை பொறியியல்: மூன்றாம் ஆண்டு பி.இ.,/பி.டெக்., முதல் எம்.இ.,/எம்.டெக்., முடிக்கும் வரை மருத்துவம்: மூன்றாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்.,/பி.வி.எஸ்சி.,/பி.டி.எஸ்., முதல் இப்படிப்பை முடிக்கும் வரை மதிப்பு:
அறிவியல்: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 - மாதம் 4000/- ரூபாய்;
இளநிலை : மாதம் 5000/- ரூபாய் முதுநிலை - மாதம் 7000/- ரூபாய்
விண்ணப்பிக்கும் முறை: உரிய விண்ணப்ப படிவத்தில் ஆசிரியரின் பரிந்துரையுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர்கள் ஆராய்ச்சி திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.
தேர்வு முறை: அறிவியல்பிரிவில் திறன்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பொறியியல் மற்றும் மருத்துவ பிரிவில் ஆராய்ச்சி திட்ட செயல்பாடு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
அறிவிப்பு மற்றும் கடைசிதேதி: ஒவ்வொரு ஆண்டும் ஜூலை/ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியாகும்.
உதவித்தொகை வழங்கும் நிறுவனம்: இந்திய தேசிய அறிவியல் அகடமி 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு