Skip to main content

மாணவர் வாசிப்புத்திறன் மேம்படுத்த முயற்சி

தொடக்க வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கு தமிழுக்கு தனிப்பயிற்சி! மாணவர் வாசிப்புத்திறன் மேம்படுத்த முயற்சி
மாணவர்களின் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு, தனிப்பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர்களின் திறனை ஊக்குவிக்கவும், கற்பித்தல் கற்றல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தவும் பாடவாரியாக பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஆய்வுகளின் மூலம், தமிழ் மொழிப்பாடத்தில், மாணவர்களின் வாசிப்பு மற்றும் எழுத்து திறன் பின்தங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


அதை மேம்படுத்தும் நோக்கத்துடன், ஆசிரியர்களின் கற்பித்தல் முறையில் மாற்றங்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, 'தமிழ் படித்தல், எழுதுதல் திறன் வளர்த்தல்' என்ற தலைப்பில், ஆசிரியர் களுக்கு தனிப்பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் பாடத்தை நயத்துடன் படித்தல், புள்ளி, கமா போன்ற குறியீடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வாசித்தல், வாசித்தலில் குறில் நெடில் பயன்பாடு, பிழையின்றி எழுதுவது, வாக்கியங்களை அமைத்தல் உள்ளிட்ட பயிற்சிகள் ஆசிரியர் களுக்கு அளிக்கப்பட உள்ளன.

இப்பயிற்சிகள், மாவட்ட அளவில், அக்., 12, 13 என, இரு தினங்களிலும், ஒன்றிய அளவில், அக்., 15, 16 என இரு தினங்களிலும் அளிக்கப்படுகின்றன.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு