Skip to main content

பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் இலவச அடிப்படை இணைய வசதி ஏர்செல்

பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் இலவச அடிப்படை இணைய வசதி: ஏர்செல் நிறுவனம் அறிமுகம்

ஏர்செல் நிறுவனம் சார்பில் இலவச அடிப்படை இணைய வசதி திட்டத்தை அறிமுகம் செய்துவைத்து, அது குறித்து விளக்குகிறார் ஏர்செல், தெற்கு வர்த்தக செயல்திட்டத் தலைவர் சங்கரநாராயணன். 
ஏர்செல் தொலைதொடர்பு சேவை நிறுவனம் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை, தமிழ்நாடு வட்டத்தை சேர்ந்த அனைத்து பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் இலவச அடிப்படை இணைய
வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக ஏர்செல், தெற்கு வர்த்தக செயல்திட்டத் தலைவர் சங்கரநாராயணன் கூறியதாவது:
ஏர்செல் தமிழகத்தில் குறிப்பாக கிராமப் பகுதிகளில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. மொபைல் இன்டர்நெட் பலரது வாழ்வின் இன்றியமையாத அம்சமாக திகழ்கிறது. இன்டர்நெட் பேக் ரீசார்ஜ் செய்தால் சில முக்கியமான தருணங்களில் நெட் பேக் தீர்ந்து இன்டர்நெட்டை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதை தடுத்து தங்குதடையில்லாத இன்டர்நெட் கிடைக்க செய்யும் நோக்குடன் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஏர்செல் நிறுவனம் நடத்திய ஆய்வில் 84 சதவீதம் பேர் குறைந்த அளவிலான டேட்டாவையே செலவு செய்கிறார்கள். அவர்கள் வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், டிவிட்டர், இ-மெயில், கூகுள் ஆகியவற்றுக்குதான் இன்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள். மீதமுள்ள 14 சதவீதம் பேர்தான் வீடியோ காலிங், வீடியோ பதிவிறக்கம் போன்றவற்றுக்கு பயன்படுத்துகிறார்கள். எனவே அந்த 86 சதவீதம் பேர் தங்குதடையின்றி இன்டர்நெட்டை பயன்படுத்த இந்த புதிய திட்டம் உதவும்.
இதன்படி புதிதாக ஏர்செல் பிரீபெய்ட் வாடிக்கையாளராக சேரும் அனைவருக்கும் 90 நாட்களுக்கு இலவச அடிப்படை இன்டர்நெட் வசதி கிடைக்கும். 2ஜி, 3ஜி வாடிக்கையாளர்கள் அனைவரும் 64 கே.பி.பி.எஸ். வேகத்தில் இன்டர்நெட்டை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதன்பிறகு ரூ.144-க்கு ரீசார்ஜ் செய்தால் அதற்கு முழு டாக்டைம் மெயின் பேலன்ஸில் கொடுக்கப்படும். கூடவே 28 நாட்களுக்கு இலவச அடிப்படை இன்டர்நெட் கிடைக்கும். ஒவ்வொரு முறை ரூ.144-க்கு ரீசார்ஜ் செய்யும்போதும் இச்சலுகை நீண்டுகொண்டே போகும்.
ஏற்கெனவே ஏர்செல் பிரீபெய்ட் வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள் ஒருமுறை ரூ.144-க்கு ரீசார்ஜ் செய்தால் முழு டாக்டைமுடன் 90 நாட்களுக்கு இலவச அடிப்படை இன்டர்நெட் கிடைக்கும். அதன்பிறகு ஒவ்வொரு முறை ரூ.144-க்கு ரீசார்ஜ் செய்யும்போதும் இச்சலுகை நீண்டுகொண்டே போகும்.
இந்த வசதியை தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் பயன்படுத்த முடியும். விரைவில் இந்தியா முழுவதும் இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சியில் ஏர்செல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்