Skip to main content

தங்க முதலீட்டு திட்டங்கள் அடுத்த மாதம் அறிமுகம்

 புதுடில்லி,: ''மத்திய அரசின், இரண்டு தங்க முதலீட்டு திட்டங்கள் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும்,'' என, பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்திகந்த தாஸ் தெரிவித்துள்ளார். 


                அவர் மேலும் கூறியதாவது:தங்கம் இறக்குமதியை குறைக்கும் நோக்கில், இரண்டு தங்க முதலீட்டு திட்டங்களுக்கு, மத்திய அரசு, அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, தங்க சேமிப்பு திட்டம், தங்க பத்திர திட்டம் ஆகியவை, அடுத்த மாதம் அறிமுகமாக உள்ளன. தங்க சேமிப்பு திட்டத்தின் கீழ், தங்க நகைகளை, வங்கியில், 1 - 15 ஆண்டுகள் வரை, டிபாசிட் செய்யலாம். குறைந்தபட்சம், 30 கிராம் தங்க நகைகளை டிபாசிட் செய்யலாம். இதற்கு வட்டி வழங்கப்படும். முதிர்வு காலத்தில், தங்கத்தின் மதிப்பை பொறுத்து, பணமாகவோ, தங்கமாகவோ பெற்றுக் கொள்ளலாம். தங்க கடன் பத்திரங்கள், 5, 10, 50 மற்றும் 100 கிராம் வீதம், 5 - 7 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்டதாக இருக்கும். இவற்றில் முதலீடு செய்யும்போது, சந்தையில் நிலவும் தங்கத்தின் மதிப்பை பொறுத்து, வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும். ஒருவர், ஓராண்டில், அதிகபட்சமாக, 500 கிராம் வரை, தங்க கடன் பத்திரத்தில் முதலீடு செய்யலாம். இவற்றில் முதலீடு செய்ய, இந்திய குடிமகன்கள் மற்றும் நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 

மத்திய அரசு, தங்க கடன் பத்திரங்கள் மூலம், நடப்பு நிதியாண்டில், 15 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.இவை தவிர, தங்க நாணயங்கள் இறக்குமதியை குறைக்கவும், மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, அசோக சக்கரம் சின்னம் பொறித்த தங்க நாணயங்கள், விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இறக்குமதி:


* இந்தியா, ஆண்டுக்கு, 1,000 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. இதில், 30 சதவீதம், குடும்பங்களின் சேமிப்பிற்கு செல்கிறது. 
* தங்கம் இறக்குமதி, ஜூலையில், 89 டன்னாக இருந்தது. இது, ஆகஸ்டில், 120 டன்னாக உயர்ந்துள்ளது. 

யாருக்கும் பாதிப்பிருக்காது:


அரசின் சிறு சேமிப்பு திட்டங்களில், வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யும் போது, சிறு சேமிப்பாளர்கள், மூத்த குடிமக்கள், பெண் குழந்தைகள் ஆகியோர் பாதிக்காத வகையில் முடிவு எடுக்கப்படும்.சக்திகந்த தாஸ், பொருளாதார விவகாரங்கள் துறை செயலர்வங்கிகளுக்கு நெருக்கடிவங்கிகள், கடனுக்கான வட்டியை குறைக்கும் போது, டிபாசிட்டிற்கான வட்டியை குறைத்தால் தான், நிதியாதாரத்தை ஸ்திரமாக வைக்க முடியும். ஆனால் அப்படி குறைக்க முடியாத வகையில், வங்கிகளுக்கு போட்டியாக, அரசின் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் உள்ளன. அஞ்சலக சேமிப்பு, பொது வருங்கால வைப்பு நிதி, மூத்த குடிமக்கள் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு அரசு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி, 8.7 - 9.3 சதவீதமாக உள்ளது. அதனால், இந்த திட்டங்களுக்கான வட்டியை குறைக்க வேண்டும் என, வங்கிகள், மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்