Skip to main content

தங்க முதலீட்டு திட்டங்கள் அடுத்த மாதம் அறிமுகம்

 புதுடில்லி,: ''மத்திய அரசின், இரண்டு தங்க முதலீட்டு திட்டங்கள் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும்,'' என, பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்திகந்த தாஸ் தெரிவித்துள்ளார். 


                அவர் மேலும் கூறியதாவது:தங்கம் இறக்குமதியை குறைக்கும் நோக்கில், இரண்டு தங்க முதலீட்டு திட்டங்களுக்கு, மத்திய அரசு, அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, தங்க சேமிப்பு திட்டம், தங்க பத்திர திட்டம் ஆகியவை, அடுத்த மாதம் அறிமுகமாக உள்ளன. தங்க சேமிப்பு திட்டத்தின் கீழ், தங்க நகைகளை, வங்கியில், 1 - 15 ஆண்டுகள் வரை, டிபாசிட் செய்யலாம். குறைந்தபட்சம், 30 கிராம் தங்க நகைகளை டிபாசிட் செய்யலாம். இதற்கு வட்டி வழங்கப்படும். முதிர்வு காலத்தில், தங்கத்தின் மதிப்பை பொறுத்து, பணமாகவோ, தங்கமாகவோ பெற்றுக் கொள்ளலாம். தங்க கடன் பத்திரங்கள், 5, 10, 50 மற்றும் 100 கிராம் வீதம், 5 - 7 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்டதாக இருக்கும். இவற்றில் முதலீடு செய்யும்போது, சந்தையில் நிலவும் தங்கத்தின் மதிப்பை பொறுத்து, வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும். ஒருவர், ஓராண்டில், அதிகபட்சமாக, 500 கிராம் வரை, தங்க கடன் பத்திரத்தில் முதலீடு செய்யலாம். இவற்றில் முதலீடு செய்ய, இந்திய குடிமகன்கள் மற்றும் நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 

மத்திய அரசு, தங்க கடன் பத்திரங்கள் மூலம், நடப்பு நிதியாண்டில், 15 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.இவை தவிர, தங்க நாணயங்கள் இறக்குமதியை குறைக்கவும், மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, அசோக சக்கரம் சின்னம் பொறித்த தங்க நாணயங்கள், விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இறக்குமதி:


* இந்தியா, ஆண்டுக்கு, 1,000 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. இதில், 30 சதவீதம், குடும்பங்களின் சேமிப்பிற்கு செல்கிறது. 
* தங்கம் இறக்குமதி, ஜூலையில், 89 டன்னாக இருந்தது. இது, ஆகஸ்டில், 120 டன்னாக உயர்ந்துள்ளது. 

யாருக்கும் பாதிப்பிருக்காது:


அரசின் சிறு சேமிப்பு திட்டங்களில், வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யும் போது, சிறு சேமிப்பாளர்கள், மூத்த குடிமக்கள், பெண் குழந்தைகள் ஆகியோர் பாதிக்காத வகையில் முடிவு எடுக்கப்படும்.சக்திகந்த தாஸ், பொருளாதார விவகாரங்கள் துறை செயலர்வங்கிகளுக்கு நெருக்கடிவங்கிகள், கடனுக்கான வட்டியை குறைக்கும் போது, டிபாசிட்டிற்கான வட்டியை குறைத்தால் தான், நிதியாதாரத்தை ஸ்திரமாக வைக்க முடியும். ஆனால் அப்படி குறைக்க முடியாத வகையில், வங்கிகளுக்கு போட்டியாக, அரசின் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் உள்ளன. அஞ்சலக சேமிப்பு, பொது வருங்கால வைப்பு நிதி, மூத்த குடிமக்கள் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு அரசு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி, 8.7 - 9.3 சதவீதமாக உள்ளது. அதனால், இந்த திட்டங்களுக்கான வட்டியை குறைக்க வேண்டும் என, வங்கிகள், மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா