Skip to main content

தேசிய கொடியில் சாதனைஉ.பி., மாநில அரசு முடிவு:

உ.பி.,யில், நாட்டின் மிகப் பெரிய கொடிக் கம்பத்தில், மிகப் பெரிய தேசிய கொடியை பறக்க விட, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.டில்லி, கன்னாட் பிளேஸ் என்ற இடத்தில், 207 அடி உயர கொடிக் கம்பத்தில், 60 அடி உயரமும், 90 அடி நீளமும் கொண்ட தேசியக் கொடி பறக்க விடப்படுகிறது. 


        இது தான், நாட்டின் மிக உயரமான கொடிக் கம்பத்தில் பறக்க விடப்படும், பெரிய தேசியக் கொடி என்ற பெருமையை பெற்றுள்ளது.இந்த சாதனையை, உ.பி.,யிலும் தொடர, முதல்வர் அகிலேஷ் யாதவ் முயற்சி மேற்கொண்டுள்ளார். தலைநகர் லக்னோவில் உள்ள பூங்கா ஒன்றில், 207 அடி உயர கொடிக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
அதில், கன்னாட் பிளேசில் பறக்க விடப்படும் அளவிலான தேசியக் கொடி, விரைவில் பறக்கவிடப்பட உள்ளது.அகிலேஷ் யாதவ் தந்தையும், சமாஜ்வாதி தலைவருமான முலாயம் சிங் யாதவின் பிறந்த நாளான, நவ., 22ல், 207 அடி உயர கம்பத்தில், பிரம்மாண்ட தேசியக் கொடி பறக்க விடப்பட உள்ளது.'தேசியக் கொடி ஏற்றுவதற்கான விதிமுறைகளின் படி, இரவில் கொடியை பறக்கவிடக் கூடாது. ஆனால், இந்த பிரம்மாண்ட கொடிக்கு, இந்த விதிமுறைகள் பொருந்தாது. எனவே, இரவு, பகலாக தொடர்ந்து பட்டொளி வீசி இந்தக் கொடி பறக்கும்' என, உ.பி., மாநில அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்