Skip to main content

ஆராய்ச்சி உதவியாளர் தேர்வு அறிவிப்பு

நகர் மற்றும் ஊரமைப்பு துறை ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு, டிசம்பர், 13ம் தேதி தேர்வு நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது. நகர் மற்றும் ஊரமைப்பு துறையில், ஆராய்ச்சி உதவியாளர் பதவியில் காலியாக உள்ள நான்கு இடங்களுக்கு, போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர், 13ம் தேதி, காலையிலும் மதியமும், இரண்டு தாள்களுக்கு தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வுக்கு, நவ., 4ம் தேதி வரை, 'ஆன் - லைன்' மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
புள்ளியியல், பொருளாதாரவியல், சமூகவியல் மற்றும் புவியியல் ஆகிய நான்கு பிரிவுகளில், தலா, ஒரு பதவி காலியாக உள்ளது. இந்த தேர்வை எழுத, சம்பந்தப்பட்ட பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, சென்னையில் மட்டுமே நடக்கும். அதில் தேர்வு பெறுவோருக்கு நேர்முகத்தேர்வு நடத்தி, இறுதி பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்