Skip to main content

ஓட்டுனர் பணியிடம்: நவ., 6க்குள் விண்ணப்பிக்கலாம்


        ஓட்டுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, நவ., ௬ம் தேதி கடைசி நாளாகும். இதுகுறித்து, தொழிலாளர் நல ஆணையர் பெ.அமுதா வெளியிட்டுள்ள அறிக்கை:

           தொழிலாளர் துறை, தொழிலாளர் உதவி ஆணை
யர் மற்றும் தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகங்களுக்கான, கார் ஓட்டுனர் பணியிட நியமனம், சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

             அவற்றுடன், சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கான வாகன ஓட்டுனர் பணியிடத்திற்கு, சென்னை மற்றும் குன்னுார் தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்களிலும், கோத்தகிரி, தோட்ட நிறுவன ஆய்வாளர் அலுவலகங்களுக்கான கார் ஓட்டுனர் பணியிட நியமனம், கோவை இணை ஆணையர் அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.

           விண்ணப்பம் www.labour.tn.gov.in எனும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அந்தந்த மாவட்டங்களில் உள்ள, தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்களில், நேரடியாக பெற்றுக்கொள்ளலாம். நவ., 6ம் தேதி, விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்