Skip to main content

ஏர்டெல் புதிய சலுகை இன்று முதல் 50% டேட்டாவை திரும்ப தர இருக்கிறார்கள்.

ஏர்டெல் நெட்வொர்க் டைரக்டர் ஸ்ரீனி கோபாலன் இன்று புதிய சலுகையைஅறிவித்து இருக்கிறார். சாதாரண மொபைல், ஸ்மார்ட்போன் மற்றும் மோடம் (Dongle) வைத்து இருப்பர்வார்களுக்கு 2G, 3G மற்றும் 4G பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இந்தசலுகை
உண்டு.


ஒவ்வொரு நாளும் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை நீங்கள் செலவு செய்த டேட்டாவில் 50 சதவீதம் டெட்டவை ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் கணக்கில் திரும்ப வரவு வைக்கப்படும். நீங்கள் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை 1GB (1024MB)டேட்டா நீங்கள் செலவு செய்து இருந்தால் மறுநாள் காலை உங்களுக்கு 50% அதாவது 512MB டேட்டா உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். வரவு வைக்கப்பட டெட்டவை நீங்கள் எப்போது வேண்டுமாலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த சலுகைக்கு 28 நாட்களுக்கு மட்டும் அல்ல. ஒவ்வொரு முறை நீங்கள் ரீசார்ஜ் செய்த பிறகு இதனை ஆக்டிவேட் செய்துக்கொள்ள முடியுமாம்.


எப்படி Activate செய்வது?


நான்கு வழிகளில் Activate செய்யலாம்.
1. உங்கள் ஏர்டெல் மொபைலில் SMS மூலம் NIGHT என டைப் செய்து 121 என்ற நம்பருக்கு அழுத்தினால் உடனே Activate ஆகிவிடும்.
2. உங்கள் ஏர்டெல் எண்ணில் இருந்து 55555 என்ற நம்பருக்குகால் செய்தாலும் ஆக்டிவேட் ஆகிவிடும்.
3. My Airtel App மூலம் Activate செய்யலாம்,
4.இங்கே கிளிக்செய்து ஏர்டெல் தளத்தில் சென்றும் உங்கள் மொபைல் எண்ணை கொடுத்து Activate செய்ய முடியும்


.இதை தவிர ஏர்டெல் நெட்வொர்க் டைரக்டர் ஸ்ரீனி கோபாலன் மேலும் பேசுகையில் புதிய மொபைல் இணைப்புகளுக்கு பல சிறப்பு பரிசுகள், சர்பிரைஸ் வழங்க இருக்கிறோம் என்றார்.


குறிப்பு:இன்று காலை ஆறு மணிக்கு பிறகு நேற்று இரவு 12 மணிக்கு பிறகு நான் பயன்படுத்திய 180MBயில் 50% 90MBதிரும்ப பேலன்ஸ்ல சேர்த்து விட்டார்கள். 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா