Skip to main content

ஏர்டெல் புதிய சலுகை இன்று முதல் 50% டேட்டாவை திரும்ப தர இருக்கிறார்கள்.

ஏர்டெல் நெட்வொர்க் டைரக்டர் ஸ்ரீனி கோபாலன் இன்று புதிய சலுகையைஅறிவித்து இருக்கிறார். சாதாரண மொபைல், ஸ்மார்ட்போன் மற்றும் மோடம் (Dongle) வைத்து இருப்பர்வார்களுக்கு 2G, 3G மற்றும் 4G பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இந்தசலுகை
உண்டு.


ஒவ்வொரு நாளும் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை நீங்கள் செலவு செய்த டேட்டாவில் 50 சதவீதம் டெட்டவை ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் கணக்கில் திரும்ப வரவு வைக்கப்படும். நீங்கள் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை 1GB (1024MB)டேட்டா நீங்கள் செலவு செய்து இருந்தால் மறுநாள் காலை உங்களுக்கு 50% அதாவது 512MB டேட்டா உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். வரவு வைக்கப்பட டெட்டவை நீங்கள் எப்போது வேண்டுமாலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த சலுகைக்கு 28 நாட்களுக்கு மட்டும் அல்ல. ஒவ்வொரு முறை நீங்கள் ரீசார்ஜ் செய்த பிறகு இதனை ஆக்டிவேட் செய்துக்கொள்ள முடியுமாம்.


எப்படி Activate செய்வது?


நான்கு வழிகளில் Activate செய்யலாம்.
1. உங்கள் ஏர்டெல் மொபைலில் SMS மூலம் NIGHT என டைப் செய்து 121 என்ற நம்பருக்கு அழுத்தினால் உடனே Activate ஆகிவிடும்.
2. உங்கள் ஏர்டெல் எண்ணில் இருந்து 55555 என்ற நம்பருக்குகால் செய்தாலும் ஆக்டிவேட் ஆகிவிடும்.
3. My Airtel App மூலம் Activate செய்யலாம்,
4.இங்கே கிளிக்செய்து ஏர்டெல் தளத்தில் சென்றும் உங்கள் மொபைல் எண்ணை கொடுத்து Activate செய்ய முடியும்


.இதை தவிர ஏர்டெல் நெட்வொர்க் டைரக்டர் ஸ்ரீனி கோபாலன் மேலும் பேசுகையில் புதிய மொபைல் இணைப்புகளுக்கு பல சிறப்பு பரிசுகள், சர்பிரைஸ் வழங்க இருக்கிறோம் என்றார்.


குறிப்பு:இன்று காலை ஆறு மணிக்கு பிறகு நேற்று இரவு 12 மணிக்கு பிறகு நான் பயன்படுத்திய 180MBயில் 50% 90MBதிரும்ப பேலன்ஸ்ல சேர்த்து விட்டார்கள். 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு