Skip to main content

அங்கன்வாடி ஊழியர்கள் 400 பேருக்கு நர்ஸ் பணி

தமிழகத்தில் அங்கன்வாடிகளில், பிளஸ் 2 முடித்து பணியாற்றுவோர்,பொது சுகாதாரத்துறையில், நர்ஸ்களாக பணி அமர்த்தப்படுகின்றனர். ஏற்கனவே, 200 பேர் பயிற்சி முடித்து, அரசுப்பணியில் சேர்ந்துவிட்டனர்; 500
பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.


தற்போது, மேலும், 400 அங்கன்வாடி பணியாளர்கள், நர்ஸ் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பயிற்சி இடங்களை தேர்வு செய்யும் கலந்தாய்வுக்காக, சென்னை, எழும்பூர் பயிற்சி மையத்தில் நேற்று குவிந்தனர்.இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழகத்தில், 10 பயிற்சி மையங்கள் உள்ளன. 400 பேரும், தங்களுக்கு வசதியான பயிற்சி இடங்களை தேர்வு செய்தனர். இரண்டு ஆண்டு பயிற்சி முடித்ததும், கிராம செவிலியராக அரசுப் பணியில் இணைவர்' என்றார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா