Skip to main content

2500 அரசுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: முதல்வர் தகவல்

 2500 அரசுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

       மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கும் விழா திங்கள்கிழமை மண்ணாடிப்பட்டு திரௌபதி அம்மன் கோயில் திடலில் நடைபெற்றது. பேரவை துணைத்
தலைவர் டிபிஆர்.செல்வம் தலைமை தாங்கினார்.


காட்டேரிக்குப்பம், சந்தை புதுக்குப்பம், பிஎஸ்.பாளையம், கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு மிக்சி, கிரைண்டர்களை வழங்கி முதல்வர் பேசியது:

புதுவையைச் சேர்ந்த அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் மிக்சி, கிரைண்டர்கள் தரப்படும். மண்ணாடிப்பட்டு தொகுதியில் 12 ஆயிரம் பேருக்கு இப்பொருள்கள் தரப்படும்.

அனைத்து துறைகளிலும் காலிப்பணியிடங்கள் நிரப்பபட்டு வருகின்றன.

ஆசிரியர்கள், மேல்நிலை எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.

விரைவில் 2500 பணியிடங்கள் நிரப்பப்படும். நேர்மையான முறையில் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு்ள்ளன என்றார் ரங்கசாமி.

அரசு அலுவலர்கள், என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா