Skip to main content

21 வயதுக்குள்பட்டோருக்கு மதுபானங்கள் விற்கப்படாது

21 வயதுக்குள்பட்டோருக்கு மதுபானங்கள் விற்கப்படாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி
     மதுபானங்களை 21 வயதுக்குள்பட்டவர்களுக்கு விற்பனை செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.


        இது தொடர்பாக நாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள், மதுக்கூடங்கள்) விதிகள் 2003, விதி எண் 11 ஏ-வின்படி, 21 வயது நிரம்பப் பெறாதவர்களுக்கு மது விற்கப்பட மாட்டாது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதவிர, 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் மது விற்பனைச் செய்வதை உறுதிசெய்ய, முறையான சரிபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்து, தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:

மதுபானங்களை பருகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வயது வரம்பு விதிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்துவது அவசியம். வாங்குபவரின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால், அவரது வயதை விற்பனையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றனர். இந்த விதிமுறைகளைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் உறுதியளித்தார். எனவே, இந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா