Skip to main content

சம்பளத்தில் ரூ.20 லட்சம் பிடித்தம்போராட கருவூல துறையினர் தயார்

ஊதியத்தில் ரூ.20 லட்சம் பிடித்தம் செய்வதை கண்டித்து, கருவூல கணக்குத்துறை ஊழியர்கள் மீண்டும் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.



சென்னையில் அக்., 1 ல் கருவூலத்துறை இயக்குனர் ஆய்வு கூட்டத்தில் மதுரை மாவட்ட கூடுதல் கருவூல அலுவலர் மூர்த்தி இறந்தார். இதற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கருவூல இயக்குனரை இடமாற்றம் செய்ய வேண்டும். மனஉளைச்சலால் இறந்த மாவட்ட கருவூல அலுவலர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருவூல கணக்குத்துறை ஊழியர்கள் அக்., 6 ல் தற்செயல் விடுப்பு எடுத்தனர்.

மேலும் இப்பிரச்னை குறித்து நிதி அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் பேச கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கத்தினர் பலமுறை முயற்சித்தும் பலனில்லை. பிரச்னைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் விரைவில் போராட்டம் அறிவிக்கப்படும் என, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, இறந்த மூர்த்தியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தார். மற்ற 
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கத்தினர் அக்., 31ல் திருச்சியில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
சங்க நிர்வாகிகள் கூறியதாவது: நிவாரணம் வழங்கியதற்காக தமிழக முதல்வரை பாராட்டுகிறோம். அக்.,6 ல் தற்செயல் விடுப்பு போராட்டம் எடுத்த 3 ஆயிரம் பேரின் ஒரு நாள் ஊதியம் ரூ.20 லட்சம் வரை பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கிய கோரிக்கையான இயக்குனரை மாற்றுவது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் மீண்டும் போராட்டம் 
நடத்துவதை தவிர வேறுவழியில்லை, என்றனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்