Skip to main content

பிளஸ்-2 தேர்வு தொடங்கும் முன்பாக 600 மெட்ரிகுலேசன் பள்ளிகள் அங்கீகாரம் பெற்றுவிடும்

பிளஸ்-2 தேர்வு தொடங்கும் முன்பாக 600 மெட்ரிகுலேசன் பள்ளிகள் அங்கீகாரம் பெற்றுவிடும் அதிகாரி தகவல்
அங்கீகாரம் புதுப்பிக்காமல் இருக்கும் 600 மெட்ரிகுலேசன் பள்ளிகள் பிளஸ்-2 தேர்வு தொடங்கும் முன்பாக அங்கீகாரம் பெற்று விடும் என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் பிச்சை தெரிவித்தார்.

பள்ளிகளின் அங்கீகாரம்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் என்று 3 வகையான பள்ளிகள் உள்ளன. இவற்றில் நர்சரி பள்ளிகள் தொடக்கப்பள்ளி இயக்குனர் ரெ.இளங்கோவன் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் 5 ஆயிரம் நர்சரி பள்ளிகள் உள்ளன. அது போல மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கட்டுப்பாட்டில் 4 ஆயிரத்து 46 மெட்ரிகுலேசன் பள்ளிகள் இருக்கின்றன. மொத்தத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மெட்ரிகுலேசன் மற்றும் நர்சரி பள்ளிகள் உள்ளன.


இந்த பள்ளிகளில் ஏராளமான பள்ளிகள் அங்கீகாரம் பெற்று உள்ளன. நிலம் குறைவாக உள்ளது, கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லை என்ற காரணங்களால் 600-க்கும் மேற்பட்ட மெட்ரிகுலேசன் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் அந்த பள்ளிகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. குறைகள் நிவர்த்தி செய்யப்பட்ட பள்ளிகள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மெட்ரிகுலேசன் ஆய்வாளர்களால் அங்கீகாரம் புதுப்பிக்க இயக்குனரகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் பிச்சை கூறியதாவது:-

தேர்வுக்கு முன்பாகபுதுப்பிக்கப்படும்

மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வாளர்களால் பள்ளிகள் அங்கீகாரத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றது. தரமாக இருந்தால் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்கப்படும். அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல் இருக்கும் பள்ளிகளில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களின் நிலை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. 

மார்ச் மாதம் முதல் வாரத்திற்குள் பிளஸ்-2 தேர்வு தொடங்கும். அதற்குள்ளாக அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல் இருக்கும் 600 மெட்ரிகுலேசன் பள்ளிகளின் அங்கீகாரமும் புதுப்பிக்கப்படும். 

இவ்வாறு பிச்சை தெரிவித்தார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு