Skip to main content

செல்வமகள் திட்டம்: டிசம்பர் 2-ந் தேதி வரை 11 வயது குழந்தைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்

உலக தபால் தினம் மற்றும் அஞ்சல் மன்றத்தின் 25-வது ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு தபால் உறை மற்றும் சிறப்பு தபால் முத்திரை வெளியிடும் விழா, சென்னை அண்ணா சாலையில் உள்ள தபால் அலுவலகத்தில் நடைபெற்றது.விழாவில், தலைமை அஞ்சல் துறை தலைவர் சார்லஸ் லோபோ, சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவ
ர் மெர்வின் அலெக்ஸாண்டர், அஞ்சல் துறை தலைவர் (தபால் மற்றும் விற்பனை மேலாண்மை) வெங்கடேஷ்வரலு ஆகியோர் சிறப்பு தபால் உறை மற்றும் முத்திரையை வெளியிட அஞ்சல் மன்ற உறுப்பினர்கள் திருக்குறள் பாஸ்கரன், ராமசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.


விழா முடிவில் சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-இந்தியா முழுவதும் 6 ஆயிரம் தபால் நிலையங்கள் ‘கோர் பேங்கிங்’ முறைப்படி இணைக்கப்பட்டுள்ளன. அதில் ஆயிரத்து 500 தபால் நிலையங்கள் தமிழகத்தை சேர்ந்தவை என்பதில் பெருமிதம் கொள்கிறோம். அதே போன்று பிரதம மந்திரியின் ஜீவன் ஜோதி, சுரக்ஷா ஆகிய இன்சூரன்ஸ் திட்டங்களில் தலா ஆயிரம் பாலிசிகள் பிடித்துள்ளோம்.இது தவிர செல்வ மகள் திட்டத்தின் கீழ் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளன. செல்வ மகள் திட்டத்தில் வருகிற டிசம்பர் 12-ந் தேதி வரை, 11 வயது குழந்தைகளையும் சேர்த்துக் கொள்வதற்கான சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.கடித போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக ஜனவரி மாதம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சிறப்பு கண்காட்சி நடத்த உள்ளோம்.


இதில், தலை சிறந்த தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கடிதங்கள் காட்சி பொருட்களாக வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.உலக தபால் தினத்தையொட்டி, சென்னை வேப்பேரி தபால் நிலையம் உள்பட பல்வேறு தபால் நிலையங்களில், பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் தபால் நிலைய அலுவல்களை நேரில் சென்று பார்வையிட்டனர். 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு