மாநில அறிவியல் பெருவிழா, கண்காட்சி மற்றும் கணித கருத்தரங்கம், டிச., 1 முதல், 3 வரை, பெரம்பலுாரில் நடக்கிறது.பள்ளி மாணவர்கள் பங்கேற்கும், ஜவஹர்லால் நேரு தேசிய அறிவியல் திருவிழா, ஆண்டுதோறும் மத்திய அரசால் நடத்தப்படும். இவ்வாண்டு விழாவில் பங்கேற்பதற்கான,
தமிழக மாணவர்களை தேர்வு செய்ய, மாநில அளவிலான நிகழ்ச்சிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி இவ்விழா, டிச., 1 முதல், 3 வரை, பெரம்பலுாரில், நடத்தப்படுகிறது. மாநில அளவில் தேர்வாகும் கண்காட்சிப் பொருட்கள், தேசிய போட்டிக்கு அனுப்பப்படும் என, பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.