Skip to main content

1,863 பதவிகளுக்கு டிச.,27ல் TNPSC தேர்வு

அரசு துறைகளில், 'குரூப் - 2 ஏ' பிரிவில், 1,863 காலியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தேர்வில், பட்டப்படிப்பு முடித்த அனைவரும் பங்கேற்கலாம்.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர்
பாலசுப்ரமணியன் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 ஏ பிரிவில், நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளில், 10க்கும் மேற்பட்ட துறைகளில், 1,863 காலியிடங்களுக்கு, டிசம்பர், 27ல் தேர்வு நடக்கும். தேர்வு எழுத விரும்புவோர், 'ஆன் - லைன்' மூலம் மட்டுமே, நவ., 11க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணத்தை, நவ., 13க்குள் செலுத்தலாம். தமிழகம் முழுவதும், 116 மையங்களில் தேர்வு நடக்கும்.பட்டப்படிப்பு முடித்த அனைவரும் தேர்வில்
பங்கேற்கலாம். தேர்வுக்கான தகுதி விவரங்களை, http://www.tnpscexams.net/ மற்றும் http://www.tnpscexams.in/ என்ற இணையதள இணைப்புகளில் அறிந்து கொள்ளலாம்.
தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்