Skip to main content

வரும் 17ம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகம் இணைந்து வரும் 17ம் தேதி வேலைவாய்ப்பு முகாம், தண்டையார்பேட்டை எம்பிடி விளையாட்டு அரங்கில் நடத்துகின்றன. 



இதில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க உள்ளன. 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் தொழிற்கல்வி பயின்றவர்கள் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.இதில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் தங்களது விவரங்களை (www.tnvelaivaaippu.gov.in) என்ற இணைய தள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-24615160 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலைநேரங்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா