Skip to main content

1,500 காலிப் பணியிடங்கள்: தள்ளாடுது கருவூலத்துறை


           ராமநாதபுரம்:தமிழக கருவூல கணக்குத்துறையில் 1,500 பணியிடங்கள் காலியாக இருப்பதால் பணிகளை முடிக்க முடியாமல் ஊழியர்கள் தத்தளிக்கின்றனர்.தமிழகத்தில் 32 கருவூல அலுவலகங்கள்,
229 சார்நிலை கருவூலங்கள் உள்ளன. இங்கு 5,186 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. தற்போது 3,600 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். கண்காணிப்பாளர், கணக்காளர், இளநிலை உதவியாளர், இரவு காவலர் பணியிடங்கள் பெரும்பான்மையாக காலியாக உள்ளன.

        தற்போது அவர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம், மருத்துவ காப்பீடு, 'இ பென்ஷன்' போன்ற பணிகள் கூடுதல் பணிகளாக வழங்கப்பட்டுள்ளன. புதிதாக சார்நிலை கருவூலங்கள் அனுமதிக்கப்பட்டாலும், அதற்குரிய பணியாளர்களை நியமிப்பதில்லை. அதேபோல் தாலுகா அலுவலகங்களுக்கு தகுந்த சார்நிலை கருவூலங்கள் இல்லை. இதனால் கருவூல ஊழியர்கள் பணிச்சுமையால் தத்தளிக்கின்றனர்.
கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கத்தினர் கூறியதாவது: கணக்காயர் அலுவலகத்தில் இருந்து புதிய பென்ஷன் திட்டம் கருவூல கணக்குத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அதற்குரிய பணியிடங்கள் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு கருவூல அலுவலகத்திற்கும் ஒரு கண்காணிப்பாளர், 2 கணக்காளர் பணியிடங்கள் கூடுதலாக வழங்கினால் மட்டுமே பணியை முடிக்க முடியும். பென்ஷனர் எண்ணிககையும் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. பணியாளர்கள் அதிகரிக்காமல் பணியை குறித்த காலத்தில் முடிக்க அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். இதனால் மனஉளைச்சலில் உள்ளோம், என்றனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு