Skip to main content

'நெட்' தேர்வு விடைத்தாள் நகல் நவ., 10 வரை விண்ணப்பிக்கலாம்

நெட் - நேஷனல் எலிஜிபிலிட்டி டெஸ்ட்' என்ற தேசிய திறனாய்வு தேர்வு விடைத்தாள் நகலை தேர்வர்களுக்கு வழங்க, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது. 


கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணியில் சேரவும், இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள், மாதந்தோறும், 25 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை பெறவும், தேசிய அளவிலான, 'நெட்' தகுதித் தேர்வெழுதி தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.
இத்தேர்வை, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., சார்பில், சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. 
ஜூன், 28ல் நாடு முழுவதும், 89 மையங்களில் நடந்த தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த, 30 ஆயிரம் பேர் உட்பட, ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதன் முடிவுகள், கடந்த, 28ம் தேதி வெளியிடப்பட்டன.
வரும் டிசம்பர், 27ல் அடுத்த நெட் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு, நவம்பர், 1ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.ஜூனில் முடிந்த தேர்வுக்கான விடை திருத்தங்களில் சந்தேகம் உள்ளதால், அதன் நகல் வேண்டும் என பலர், சி.பி.எஸ்.இ.,க்கு மனு அளித்தனர்.இதையடுத்து, 'நகல் தேவைப்படுவோர், 'செயலர், சி.பி.எஸ்.இ., புதுடில்லி' என்ற பெயருக்கு, 500 ரூபாய்க்கான, டி.டி., எடுத்து, நவம்பர், 10க்குள் அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்