Skip to main content

10ம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழி கட்டாயம்!

நடப்பு கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், தமிழ் பாடம் கட்டாயம் என்பதால், சிறுபாண்மை மொழி பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சியை அதிகரிக்க, குறைந்த பட்ச கற்றல் கையேடு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில், 2005-06 கல்வியாண்டு வரை,
தமிழ் மொழிப்பாடம் விருப்பப்பாடமாக இருந்து வந்தது. இதனால், அவரவர் தாய்மொழி அல்லது விருப்ப மொழிகளை பாடமாக எடுத்து படிக்கும் நிலை இருந்து வந்தது. கடந்த, 2006-07 ம் கல்வியாண்டு முதல், தமிழ் மொழி பாடம் கட்டாயமாக்கப்பட்டது. அந்த ஆண்டு முதல் வகுப்பில் துவங்கி, ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக, அடுத்தடுத்த வகுப்புகளில், தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதனால், 2015-16ம் கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும், அனைத்து மாணவர்களும், தமிழ் மொழிப்பாடத்தை கட்டாயமாக தேர்வெழுத வேண்டும்.
சிறுபாண்மை மொழிப்பள்ளிகள் மற்றும் தமிழ் தாய்மொழியல்லாத மாணவ, மாணவியரும்,பொதுத்தேர்வில், தமிழ் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் சரிந்து விடாமல் இருக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது,ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம், குறைந்தபட்ச கற்றல் கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. 

சிறுபான்மை மொழி பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை நடத்தி, அம்மாணவர்களுக்கு இக்கையேடுகளை வழங்கியும், சிறப்பு பயிற்சியளிக்க ஏற்பாடு செய்யவும், முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு