Skip to main content

பேராசிரியர் இன்றி நடக்கும் வகுப்புகள் : கல்லூரிகளில் திடீர் ஆய்வுக்கு அதிகாரிகள் திட்டம்

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பேராசிரியர்கள் இல்லை என்று புகார் எழுந்துள்ளதால், கல்லுாரிகளில் திடீர் ஆய்வு நடத்த, பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., மற்றும் அகில இந்திய கல்வி
கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.


தமிழகத்திலுள்ள, 530 இன்ஜி., கல்லுாரிகளில், பல கல்லுாரிகள் தன்னாட்சி பெற்றவை. ஆனால், அனைத்து கல்லுாரிகளும், ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்று, அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ளன. இதேபோல், கலை கல்லுாரிகள், யு.ஜி.சி., அங்கீகாரம் பெற்று, 13 அரசு பல்கலைகளின் இணைப்பில் செயல்படுகின்றன.

இவற்றில், இன்ஜி., கல்லுாரிகளில், 15 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர்; கலை, அறிவியல் கல்லுாரிகளில், 20 - 30 மாணவர் வரை, ஒரு பாடப்பிரிவுக்கு ஒரு பேராசிரியர் நியமிக்க விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், பல கல்லுாரிகளில் நிரந்தர பேராசிரியர்கள் இல்லாமல், ஆராய்ச்சி மாணவர்களைக் கொண்டு பாடம் நடத்துவதாக, யு.ஜி.சி., - ஏ.ஐ.சி.டி.இ.,க்கு புகார்கள் வந்தன.

மாணவ எண்ணிக்கைக்கு ஏற்ப, பேராசிரியர்கள் இல்லாததால், கல்வித்தரம் குறைவதுடன், கல்லுாரிகளில் தேர்ச்சி கணிசமாக சரிந்துள்ளது என, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் சகாஸ்ரபுதேவ், யு.ஜி.சி., துணைத் தலைவர் தேவராஜு பல நிகழ்ச்சிகளில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கல்லுாரிகளில் அதிரடி ரெய்டு நடத்தி, பேராசிரியர் நிலவரத்தை அறிக்கையாக சமர்ப்பிக்க, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் யு.ஜி.சி., அதிகாரிகள், பல்கலைகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதன்படி, அண்ணா பல்கலை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர், இன்ஜி., கல்லுாரிகளில் திடீர் ஆய்வு நடத்த உள்ளனர். இந்த ஆய்வில், ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.இதேபோல், சென்னைப் பல்கலை, பாரதியார் பல்கலை மற்றும் காமராஜர் பல்கலை உள்ளிட்ட பல பல்கலைகளில், யு.ஜி.சி., குழுவினர் ஆய்வு நடத்தத் திட்டமிட்டுள்ளதாக, யு.ஜி.சி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு