Skip to main content

இன்று வெளியாகிறது நேதாஜி ஆவணங்கள்: மர்மம் விலகுமா?

கோல்கட்டா: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த 64 ஆணவங்களை மேற்குவங்க அரசு இன்று வெளியிட உள்ளது. இதன் மூலம் பலவருடங்களாக அவரது மறைவில் புதைந்து கிடக்கும் உண்மைகள் வெளிவரலாம் என தெரிகிறது.சுதந்திர போராட்ட தியாகியும், இந்திய தேசிய ராணுவத்
தினை (ஐ.என்.ஏ. நிறுவியவருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணம் குறித்த மர்மங்கள் இன்று வரை விடை தெரியாமல் இருந்து வருகிறது. 1945-ம் ஆண்டு தைவான் விமான விபத்தில் அவர் இறந்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. முரண்பட்ட தகவல்களால் மத்திய அரசும் அவரது ஆணவங்களை வெளியிடுவதில் தயக்கம் காட்டி வருகிறது.



தகவலறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிடக்கோரி மனு செய்தனர். இதற்கு மத்திய அரசு,பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்து வந்தது. வெளிநாடுகளுடனான வெளியுறவு பாதிக்கும் எனவும் பதில் அளித்துள்ளது.நேதாஜி குறித்து மத்திய அரசு வசம் 130 ஆவணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இன்று வெளியாகிறது

இந்த பரபரப்பான சூழ்நிலையில் மேற்குவங்க மாநில அரசும் தங்கள் வசம் நேதாஜி குறித்த ஆவணங்களை வைத்துள்ளது.இது தொடர்பாக அம்மாநில ஆளும் திரிணாமுல் காங். முதல்வர் மம்தா பானர்ஜி, கடந்த வாரம் தடாலடி அறிவிப்பை வெளியிட்டார். அதில் நேதாஜி குறித்த 64 ஆவணங்கள் வெளியிடப்படும் என தெரிவித்தார். இந்த அறிவிப்பிற்கு நேதாஜியின் உறவினர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இன்று கோலகட்டா காவல்துறை அருங்காட்சியகத்தில் நேதாஜி குறித்த ஆவணங்கள் வெளியிட ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.இதற்காக நேதாஜியின் உறவினர்கள் ஆவணங்களை பார்க்கும் ஆர்வமுடன் வந்துள்ளனர்.
கோல்கட்டா போலீஸ் இணை கமிஷனர் ராஜிவ் மிஸ்ரா கூறியதாவது: இன்று காலை 930 மணிக்கு நேதாஜி ஆவணங்கள் வெளியிடப்படும். இதில் 1937-ம் ஆண்டு 1947-ம்ஆ ண்டு வரையில் கிடைத்த வகையில் மேற்குவங்க உளவுப்பிரிவு போலீசார் 9 ஆவணங்களும், கோல்கட்டா சிறப்புப்படை போலீசார் 55 ஆவணங்கள் என 64 ஆவணங்கள் வெளியிடப்பட உள்ளது என்றார்.

ஆவணங்கள் எவை:
* நேதாஜி தனது குடும்பத்தினருக்கு எழுதிய கடிதங்கள்.
* இந்திய தேசிய ராணுவம் நிறுவுவதற்காக திட்டம் தீட்டியது குறித்த கடிதங்கள்.
* காங். கட்சி மீது ஏற்பட்ட அதிருப்தியால் பார்வர்டு பிளாக் கட்சி துவக்கியது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு