Skip to main content

இணையதளம் மூலம் பொருள்கள் வாங்க எஸ்.பி.ஐ.யின் தனி கடன் அட்டை அறிமுகம்

இணையதளத்தின் மூலமாக பொருள்களை வாங்குவதற்கான பிரத்யேக கடன் அட்டையை (simply click credit card) புதன்கிழமை அறிமுகப்படுத்தியதுபாரத ஸ்டேட் வங்கி.இதுகுறித்து சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாரத
ஸ்டேட் வங்கியின் முதன்மைச் செயல் அதிகாரி விஜய் ஜசுஜா கூறியதாவது:


இணையதளத்தில் பொருள்களை வாங்கும் திறன் இளம் தலைமுறையினரிடையே அதிகரித்து வருகிறது. இணையதளத்தில் தரமான, குறைவான விலையில் பொருள்களை வாங்கி, அப்பொருள்கள் அவர்களது இல்லத்திற்கு சென்று விநியோகிப்பது பலருடைய கவனத்தை பெற்றுள்ளது.


எனவே, இணையதளம் மூலம் எளிதில் பொருள்களை வாங்குவதற்கும், மேலும் பணத்தை மிச்சப்படுத்தவும் புதிய கடன் அட்டையை அறிமுகப்படுத்துகிறது.இந்தப் புதிய கடன் அட்டை மூலம் பாரத ஸ்டேட் வங்கி, இணையதளத்தில் பிரபலமாக இருக்கும் நிறுவனங்களுடன் கை கோர்த்துள்ளது. அதன்படி "அமேஸான் இந்தியா',"புக் மை ஷோ', "கிளியர் ட்ரிப்', "பேஃப் பர்னிஷ்', "புட் பாண்டா', "லென்ஸ் கார்லேண்ட்', "ஓலா கேப்ஸ்' இணையதளங்களில் இந்த கடன் அட்டை மூலம் எளிதாக பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.


வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் செலவு செய்யும் அனைத்திற்கும் 5 மடங்கு வெகுமதி புள்ளிகளை இந்தப் புதிய கடன் அட்டை வழங்கும். மேலும், இந்த கடன் அட்டையுடன் இணைந்துள்ள நிறுவனங்களின் பொருள்களை வாங்குபவர்களுக்கு 10 மடங்கு வெகுமதி புள்ளிகளை வழங்குவது இதன் சிறப்பாகும். இந்தப் புதிய கடன் அட்டையை பெறுவதற்கு ரூ.499 செலுத்த வேண்டும் என்றார் விஜய் ஜசுஜா. 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு