Skip to main content

தெருவுக்கு ஒரு மாணவரை சுகாதார தூதராக நியமிக்க உத்தரவு

பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை - திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்க தெருவுக்கு ஒரு மாணவரை சுகாதார தூதராக நியமிக்க உத்தரவு
பள்ளிக்கல்வித் துறை பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகம் முழுவதும் திறந்தவெளி கழிப்பிடமில்லா ஊராட்சிகளை ஏற்படுத்த
பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரிகள் பள்ளிகளில் காலை, மாலை இறைவணக்கத்தில் திறந்தவெளி கழிப்பிடத்தால் உருவாகும் சுகாதார கேட்டினை மாணவ, மாணவியருக்கு விளக்க வேண்டும். பள்ளிகளில் உள்ள கழிப்பறையை மாணவ, மாணவியர் பயன்படுத்த செய்ய வேண்டும். கிராமங்கள், நகரங்களில் கழிப்பறை இல்லாத வீடுகள் விவரம் அறிந்து தனிநபர் இல்ல கழிப்பறை கட்ட ஆசிரியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


பொதுநலனில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியரை ஒவ்வொரு தெருவிற்கும் ஒருவர் வீதம் சுகாதார தூதுவர்களாக நியமிக்க வேண்டும். இந்த சுகாதார தூதுவர்கள் அந்தந்த தெருக்களில் சுகாதாரம் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும். திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்த மாட்டோம் என மாணவர்களிடம் ஆசிரியர்கள் உறுதிமொழி கடிதம் பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா