Skip to main content

வாட்ஸ் அப் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு: வாபஸ் பெற்றது மத்திய அரசு

வாட்ஸ் அப் தகவல்களை 90 நாட்களுக்கு அழிக்கக்கூடாது என்ற புதிய கொள்கைக்கு எதிர்ப்பு: வாபஸ் பெற்றது மத்திய அரசு
           வாட்ஸ் அப் தகவல்களை 90 நாட்களுக்கு அழிக்கக்கூடாது என்ற நடைமுறையை செயல்படுத்த மத்திய அரசு புதிய வரைவு கொள்கையை கொண்டு வருவது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அடுத்த மாதம்
16ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.


            இந்நிலையில் மக்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் தற்போது வாட்ஸப் மற்றும் சமூக வலைதளங்களுக்கு விலக்கு அளித்துள்ளது. வாட்ஸ்அப் செயலி மூலம் அனுப்பப்படும் தகவல்களை பாதுகாப்பு கருதி 90 நாட்களுக்கு சேமித்து வைக்க வேண்டும் எனவும், அவ்வாறு சேமிக்காமல் டேட்டாக்களை அழித்துவிட்டால் அது சட்டவிரோதம் என அறிவிக்க வகை செய்யும் புதிய தேசிய வரைவு கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இதுபோல், சேவையை வழங்கும் நிறுவனங்களும் இந்தியாவிலேயே பயனாளர்களின் தகவல்களை சேமித்து வைக்கும் வசதிகளை ஏற்படுத்துவதும் கட்டாயம். இந்த திட்டம் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு அதிகாரியாக விஞ்ஞானி கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு akrishnan@deity.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்ததுஇந்நிலையில் இந்த புதிய கொள்கையினால் மக்களுடைய அந்தரங்கத்தில் நுழைய முயற்சிக்கின்றது மத்திய அரசு என்ற சர்ச்சை எழுந்ததுடன், மக்கள் மத்தியில் எதிர்ப்பும் அதிகரித்துள்ளது.இதனால் வாட்ஸப் மற்றும் சமூக வலைதளங்களுக்கு கொண்டுவர இருந்த புதிய வரைவு கொள்கையை மத்திய அரசு கைவிட்டது

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா