Skip to main content

'இவர் பழைய வாக்காளர்'காட்டிக்கொடுக்கும் 'சாப்ட்வேர்'


"ஒரு வாக்காளர் இரண்டு இடங்களில் இருந்தால் வாக்காளரின் போட்டோவை அடையாளம் காட்டும் புதிய 'சாப்ட்வேரை' தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, திருத்தம், முகவரி மாற்றம், புதிய வாக்காளர்
சேர்ப்பு பணிகள் நடக்கிறது.


2016 ஜனவரி முதல் நாளில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் புதிய வாக்காளர்களாக சேர மனு செய்யலாம். சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் நடந்த வாக்காளர் சிறப்பு முகாம்களில், அதிகளவு புதிய வாக்காளர்களாக சேர மனு அளித்துள்ளனர்.முகாம்களில் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் மாவட்டம் வாரியாக தேர்தல் ஆணைய கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இம் மனுக்கள் மீது ஒரு வாரத்திற்கு பின், வாக்குச்சாவடி அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, பாகம் வாரியாக பிரித்து, வீடு, வீடாக சென்று விசாரணை நடத்தப்பட உள்ளது.புதிய சாப்ட்வேர் அறிமுகம்: 19 வயதுக்கு மேற்பட்ட பழைய வாக்காளர் கடந்த தேர்தலின் போது ஒரு தொகுதியில் இருந்திருப்பார். அவர் தற்போது வேறு ஒரு தொகுதியில் வாக்காளராக சேர படிவம் 6ல் விண்ணப்பிக்க வேண்டும். 

இந்த விண்ணப்பத்தில் பகுதி 4ல், பழைய முகவரி விபரம் குறிப்பிட வேண்டும். பழைய முகவரியில் விண்ணப்பித்தவர் பழைய வாக்காளராக இருந்தால் தற்போது புதிதாக தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ள 'சாப்ட்வேர்' அவரின் 'போட்டோ இமேஜ்ஜை' கண்டுபிடித்து தெரிவிக்கும். இந்த சாப்ட்வேர் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரிவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த வசதியால் ஒரே வாக்காளர் இரண்டு தொகுதியில் இனி வாக்காளராக இருக்க முடியாது. தமிழகத்தில் எந்த தொகுதியில் இருந்து மாறி மற்றொரு தொகுதியில் வாக்காளராக சேர விண்ணப்பித்தால் புதிய 'சாப்ட்வேரில்' போட்டோவுடன் தகவல் தெரிவித்து விடும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு