Skip to main content

மாநில அளவிலான ‘ஸ்லெட்’ தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியாவதில் காலதாமதம்

மாநில அளவிலான ‘ஸ்லெட்’ தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியாவதில் காலதாமதம்: முதுகலை பட்டதாரிகள் ஏமாற்றம்.
மாநில அளவில் நடத்தப்படும் ‘ஸ்லெட்’ தகுதித் தேர்வு அறிவிப்பு
வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் முதுகலை பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பல்கலைக்கழகத்திலோ அல்லது கல்லூரியிலோ உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமா
னால் தேசிய அளவிலான ‘நெட்’ தகுதித் தேர்விலோ அல்லது மாநில அளவில் நடத்தப்படுகின்ற ‘ஸ்லெட்’ தகுதித் தேர்விலோ கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியில் சேரலாம்.
அதேநேரத்தில் ‘ஸ்லெட்' தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டுமே பணியாற்ற முடியும். ஸ்லெட் தேர்வை நடத்துவதற்கு குறிப்பிட்ட பல்கலைக்கழகத்துக்கு 3 ஆண்டுகளுக்கு அனுமதி வழங் கப்படும். அந்த வகையில், தமிழகத்தில் ஸ்லெட் தேர்வு நடத்தும் பொறுப்பு கடைசியாக கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஸ்லெட் தேர்வை நடத்தியது. இந்த நிலையில், 2015 முதல் 2018 வரை 3 ஆண்டுகளுக்கு ஸ்லெட் தேர்வு நடத்தும் பொறுப்பு கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதமே வழங்கிவிட்டது. ஆனால், அனுமதி கிடைத்து 5 மாதங்கள் ஆகியும் இன்னும் ஸ்லெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால், முதுகலை பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஆண்டுக்கு இரண்டு முறை
நெட் தேர்வானது ஆண்டுக்கு இரண்டு தடவை (ஜூன், டிசம்பர்) திட்டமிட்டபடி நடத்தப்படுகிறது. கடந்த 2014 ஜூன் மாதம் வரையில் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி)தான் நெட் தேர்வினை நடத்தி வந்தது. 2014 டிசம்பர் முதல் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நெட் தேர்வை நடத்தி வருகிறது. நெட் தேர்வினைப் போன்று ஸ்லெட் தேர்வையும் ஆண்டுக்கு இரு முறை நடத்த வேண்டும் என்பது தமிழக மாணவர்களின் விருப்பம். இனிமேலும் காலதாமதம் செய்யா மல் உடனடியாக ஸ்லெட் தேர்வுக் கான அறிவிப்பை வெளியிட்டு விரைவாக தேர்வை நடத்த வேண் டும் என்று முதுகலை பட்டதாரி களும், தற்போது இறுதி ஆண்டு முதுகலை பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் எதிர்பார்க்கிறார்கள். இதுதொடர்பாக முதுகலை பட்டதாரி மாணவர்கள் கூறுகையில், “நெட் தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்படுவதால் போட்டி கடுமையாக இருக்கும். ஆனால், ஸ்லெட் தேர்வு, மாநில அளவிலான தேர்வு என்பதால் அதில் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தமிழகத்தில் ஸ்லெட் தேர்வு 2 ஆண்டுக்கு முன்னர் நடத்தப்பட்டது. அதன் பிறகு அத்தேர்வு நடத்தப்படவே இல்லை. நெட் தேர்வைப் போல ஸ்லெட் தேர்வையும் ஆண்டுக்கு இரு முறை நடத்த வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா