முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளான, அக்., 15ம் தேதி, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 'அப்துல் கலாமின் சாதனைக
ளை எடுத்துக் காட்டும் வகையில், எதிர்காலத்துக்கு தேவையான ஆராய்ச்சி கள் மற்றும் அறிவியல் வளர்ச்சிகள் குறித்து, பள்ளிகளில் பல்வேறு போட்டிகளை நடத்த வேண்டும். காலாண்டுத் தேர்வு முடிந்து பள்ளிகள் திறந்ததும், இதுதொடர்பாக திட்டமிட்டு, முன்னேற்பாடுகளை, ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி