தனி நபர்களும், நிறுவனங்களும் வருமான வரியை முன்கூட்டியே செலுத்துவதற்கு செவ்வாய்க்கிழமை (செப். 15) கடைசி நாளாகும்.
இதுதொடர்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம்
தொடர்ச்சியாக சுட்டுரையில் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், வருமான வரியை செப்டம்பர் 15-க்குள் செலுத்திவிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுதொடர்பாக தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்டவற்றிலும் மத்திய அரசு விளம்பரம் வெளியிட்டு வருகிறது.
முன்கூட்டியே செலுத்தும் வரியின்மூலம், நிறுவனங்களின் செயல்திறனை ஓரளவுக்கு கணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.