Skip to main content

வெப் வாட்ஸ்அப் பயன்படுத்தினால் கம்ப்யூட்டர் முடக்கப்படும் அபாயம்

புதுடெல்லி:  ஸ்மார்ட் போன்களில் அதிகம் பயன்படுத்தப்படும் ஆப்களில் மிக முக்கியமானது வாட்ஸ்அப். சாட்டிங், வீடியோ, புகைப்படங்களை பகிர்ந்து  கொள்ளுதல் மட்டுமின்றி குரல் அழைப்புகள் மேற்கொள்ளவும் வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது. கம்ப்யூட்டரில் பார்க்க வசதியாக
வெப் வாட்ஸ்அப்  அறிமுகம் செய்யப்பட்டது.  வெப் வாட்ஸ்அப் மூலம் மட்டும் சுமார் 20 கோடி பேர் வாட்ஸ் அப் பார்க்கின்றனர். இவ்வாறு பயன்படுத்துவோரின்  கம்ப்யூட்டர்கள் முடக்கப்படுவதாக வைரஸ் செக்யூரிட்டி நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஒரு மொபைலில் இருந்து மற்றொரு மொபைல்  போனுக்கு விகார்டு முறையில் போன் நம்பர் அனுப்பலாம். இதுபோன்றே வெப் வாட்ஸ் அப் மூலம் சாட்டிங் செய்பவர்களுக்கு கம்ப்யூட்டர் ஹேக்கிங்  செய்பவர்கள் விகார்டு அனுப்புகிறார்கள்.


உண்மையில் இது கம்ப்யூட்டர் ஹேக்கிங் செய்வதற்கான இஎக்ஸ்இ பைலாக இருக்கும். வாட்ஸ்அப் வெப்பில் இந்த விகார்டை ஏற்று திறந்து  பார்ப்பவர்களின் கம்ப்யூட்டர் சீர்குலைக்கப்பட்டு முடக்கப்படுகிறது என்று வைரஸ் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் நிறுவனத்தினர்  இதற்கான முதற்கட்ட தீர்வை கண்டறிந்துள்ளனர். இருப்பினும், மொபைலில் உள்ள வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்வதோடு, தெரியாத நபர்கள்  அனுப்பும் தகவல்கள், பைல்களை கவனமுடன் கையாளுமாறு வைரஸ் செக்யூரிட்டி நிறுவனம் எச்சரித்துள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு