Skip to main content

புதிய கேஸ் இணைப்பு எடுக்க இன்டர்நெட் மூலம் எளிய வழி


          புதிதாக கேஸ் இணைப்பு எடுப்பதற்கு அரசு ஒரு எளிய ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் பெயர் ஷாகஜ் எல்பிஜி திட்டம் (Sahaj LPG)


இது கேஸ் இணைப்பு பெறுவதில் எமது சொந்த அனுபவம்.


பெங்களூரில் இந்திரா நகரில் குடியிருக்கும் போது ஒரு எச்பி
கேஸ் இணைப்பு பெற்றிருந்தோம்.

அதன் பிறகு அபார்ட்மென்ட் வாங்கி புதிய இடத்திற்கு மாற வேண்டி இருந்தது. ஆனால் அபார்ட்மென்ட் சிட்டியை விட்டு வெளியே இருந்ததால் யாரிடம் போய் கேட்பது குழப்பமாக இருந்தது.

அதே எச்பி டீலரிடம் கேட்டால் அவர் மடிவாளாவை சொன்னார். சரி மடிவாளா அலுவலகத்தைக் கேட்டால் இன்னொரு எலெக்ட்ரானிக்ஸ் சிட்டி அலுவலகத்தைக் கை காட்டினார்கள்.

அவங்க கிட்ட பாரத்தை எல்லாம் நிரப்பி கொடுத்து விட்டு வந்தால் ஒரு வாரம் கழித்தும் எந்த தகவலும் காணோம்.

கடைசியில் என்னவென்று போய் கேட்டால் உங்க ஏரியாவிற்கு எச்பி டெலிவெரி எல்லாம் கிடையாது என்று சொன்னார்கள். பாரத் ஏஜென்சியை போய் பாருங்கள் என்று சொன்னார்கள். 

இதை முதலிலே சொல்லி இருக்கலாம் என்று வெறுப்போடு பாரத்தில் சென்று இணைந்தோம்.

இந்தியாவில் மட்டும் இந்த நிலை இருக்கும். எல்லாம் எல்லா இடத்திலும் இருக்கும். ஆனால் ஒருங்கிணைப்பு இல்லாததால் அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு கூட தகவல்கள் தெரிவதில்லை.

நாம் தான் ஒரு கேஸ் கனெக்சன் எடுப்பதற்கு ஆபீசிற்கு லீவ் போட்டு அலைய வேண்டும்.

இந்த மோசமான அனுபவத்தின் காரணமாக தற்போது ஒரு செய்தியை பார்த்த பிறகு நல்ல இருங்கப்பா என்று கும்பிட தோன்றியது.

ஆமாம். தற்போது அணைத்து கேஸ் நிறுவனங்களின் டீலர்களையும் ஆன்லைன் வழியாக ஒருங்கிணைத்துள்ளனர். இந்த திட்டத்தின் பெயர் Sahaj LPG.

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால்,
முதலில் http://mylpg.in/docs/KYC.pdf என்ற இணைப்பில் படிவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
பிறகு mylpg.in என்ற தளத்தில் சென்று நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்தையும், தேவையான அடையாள அட்டைகளையும் ஸ்கேன் செய்து ஏற்றிக் கொள்ள வேண்டும்.
அடுத்த இரண்டு நாட்களில் தானாகவே உரிய டீலர்களை தேர்ந்தெடுத்து ஒரு ஐடியும் மின் அஞ்சலில் கொடுப்பார்கள். 
ஐடி கிடைத்த பிறகு ஆன்லைனில் புதிய இணைப்பிறகு தேவையான கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம்.
அதன் பிறகு மூன்று அல்லது நான்கு நாட்களில் டீலர் வீட்டிற்கு வந்து சிலிண்டரை கொடுத்து செல்வார்.
ஆக, மொத்தம் ஒரு வாரத்தில் நமக்கு தேவையான இணைப்பு வீட்டை விட்டு வெளியே செல்லாமலே கிடைத்து விடும்.
அதிலும் டீலர்களுக்கு தேவையற்ற லஞ்சம் கொடுப்பதும் இதனால் ஒழியும்.

நடைமுறையில் கொஞ்சம் தாமதமானாலும் ஒரு நல்ல எளிய வழிமுறையாக மாற வாய்ப்புள்ளது.

மோடி அரசின் இத்தகைய டிஜிட்டல் தொடர்பான திட்டங்கள் வரவேற்கத்தக்க ஒன்றே!

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு