Skip to main content

அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக மத்திய அரசின் விஞ்ஞானிகள்

பின் தங்கிய அரசு பள்ளிகளில் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்க, மத்திய அரசின் சி.எஸ்.ஐ.ஆர்., விஞ்ஞானிகள் ஒவ்வொருவரும் 100 மணி நேரம் வகுப்பு எடுக்கப் போகின்றனர்.மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் சி.எஸ்.ஐ.ஆர்., (கவுன்சில்
ஆப் சயின்டிபிக் அன்ட் இன்டஸ்ட்ரியல் ரிசர்ச்) செயல்படுகிறது.


இதன் கட்டுப்பாட்டில் 38 ஆராய்ச்சி கூடங்கள் உள்ளன. இதில் ஆறாயிரத்துக்கும்மேற்பட்ட விஞ்ஞானிகள் பணியாற்றுகின்றனர். இவர்கள் புதிய தொழில் நுட்பங்களை கண்டு பிடித்து தொழில்துறை நிறுவனங்கள் பயன்படுத்தும் வகையில் வழங்கி வருகின்றனர். இவர்களின் கண்டுபிடிப்புகளை படித்தவர்களால் மட்டுமே அறிய முடிந்தது. கிராமப்புற மாணவர்கள் விஞ்ஞான அறிவில் சிறந்து விளங்க வேண்டும், என்பதற்காக, மத்தியஅரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் ஒரு கட்டமாக, இந்தியா முழுவதும் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்., விஞ்ஞானிகள் ஆண்டுக்கு 100 மணி நேரம், பின்தங்கிய அரசு பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வகுப்பு எடுக்கப்போகும் விஞ்ஞானிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகின்றன.


காரைக்குடி சிக்ரி விஞ்ஞானி மீனாட்சி சுந்தரம் கூறியதாவது:


10 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள், அறிவியலை மார்க் வாங்குவதற்கு மட்டுமே படிக்கின்றனர். இதனால் அவர்களுக்கு சிந்திக்கும் திறனின்றி போகிறது. மேலும் கல்லூரிகளில் அறிவியல் படிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. எனவேகிராமப்புற பள்ளி அளவில், விஞ்ஞானிகளை உருவாக்கும் முயற்சியில் தற்போது மத்தியஅரசு ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, காரைக்குடி சிக்ரி விஞ்ஞானிகள் கிராமப்புறத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று, இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் தொழில் கல்வி என எந்த துறையில் அவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்களோ, அத்துறை குறித்து விளக்கம் அளிக்கின்றனர்.பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் பாடத்துடன், கூடுதலாக தாங்கள் செய்து வரும் ஆராய்ச்சி, அதனால் ஏற்படும் சமூக பலன், விஞ்ஞான துறையின் எதிர்காலம், அதில் உள்ள படிப்புகள், விஞ்ஞானம் மனித வாழ்வில் எவ்வாறு பயன்படுகிறது, என்பது குறித்து கற்று கொடுக்க உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் கற்றுக்கொடுக்க சிக்ரியில் 114 விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், என்றார் 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு