Skip to main content

புவியியல் சுரங்கத்துறை அலுவலகத்தில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

விருதுநகர் மாவட்ட துணை இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கு  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து ஆட்சியர் வே.ராஜாராமன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:
இம்மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை
இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணிக்கு ரூ.9 ஆயிரத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட இருக்கின்றனர். இப்பணிக்கு எஸ்.சி.எ., எஸ்.சி, எஸ்.டி ஆகிய பிரிவினருக்கு 21 வயது முதல் அதிகபட்ச வயது வரம்பு 35 வயதிற்குள்ளும், எம்.பி.சி, பி.சி பிரிவினருக்கு 32 வயதிற்குள்ளும், இதர பிரிவினருக்கு 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
மேலும், குறைந்தபட்ச கல்வி தகுதியாக 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். எனவே இப்பணிக்கு தகுதியுள்ளவர்கள் சுய விவர குறிப்புகளுடன், ஆதார் அடையாள அட்டை, உரிமம், ஜாதிசான்று ஆகியவைகளுடன் விண்ணப்பங்களை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் துணை இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகம், விருதுநகர் என்ற அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வருகிற அக்.5-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்