Skip to main content

வாக்குச்சாவடிகளில் 'ஆன்லைனில்'வாக்காளர்களைச் சேர்க்க முடிவு:படிவங்களுக்கு 'குட்பை'


திண்டுக்கல்:காகித பயன்பாட்டை குறைக்க, வாக்குச்சாவடிகளில் 'ஆன்லைன்' மூலம் வாக்காளர்களைச் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.மத்திய, மாநில அரசுகள்'இ கவர்னன்ஸ்'திட்டத்தில்
அனைத்து துறைகளையும் 'ஆன்லைன்' மூலம் இணைத்து வருகின்றன.


இதனால் காகித பயன்பாடு குறைந்துள்ளது. தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை, நீக்க, திருத்தம், தொகுதிக்குள் இடமாற்றம் செய்ய விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதனால் தேர்தல் ஆணையத்தில் மட்டுமே அதிக காகித பயன்பாடு உள்ளது.இதை குறைக்க வாக்குச்சாவடிகள், தாலுகா அலுவலகங்களில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், இட மாற்றம் போன்றவை 'ஆன்லைனில்' மேற்கொள்ள தேர்தல் ஆணையம்திட்டமிட்டுள்ளது. இதற்காக வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது: வாக்குச் சாவடிகளில் நேரடியாக 'ஆன்லைனில்' பதியப்படுவதால் காகித பயன்பாடு குறைவதோடு,மீண்டும் கம்ப்யூட்டரில் ஏற்ற தேவை இருக்காது. இப்பணிக்காக வாக்குச்சாவடிகளில் கம்ப்யூட்டர் இயக்கத்தெரிந்த இளைஞர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது, என்றார். 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு